districts

திருவில்லிபுத்தூரில் கூடுதல் தூய்மைப் பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை

திருவில்லிபுத்தூர், மார்ச் 29-  திருவில்லிபுத்தூர் நகராட்சி மாதாந்திர  கவுன்சில் கூட்டம் நகராட்சி தலைவர் ரவி கண்ணன் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் செல்வமணி, ஆணையர்  ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வரு மாறு: பாலமுருகன் (திமுக) பேசுகையில், நகராட்சி கிடங்கில் தொடர்ந்து ஒரு வாரத்  திற்கு மேலாக தீ எரிவதால் சுகாதாரச் சீர்கேடு நிலவுகிறது. நகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து அந்த இடத்திலேயே குப்பை யை கொட்டி வருகின்றனர் என்றார். நகராட்சியில் சுகாதாரப் பிரிவில் மட்டுமே பிரச்சனை உள்ளது. கவுன்சிலர் கள் புகார் கூறினால் அதிகாரிகள் உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகா தார பணியாளர்கள் வார்டு வாரியாக சென்று தூய்மை பணியை மேற்கொள்ள வேண்டும்.நகராட்சிகளில் உள்ள ஓடை களை தூர்வாரினால் கழிவுநீர் எளிதாக வெளியேறும். திருவில்லிபுத்தூர் குப்பை இல்லாத நகராட்சி என பெயர் பெற வேண்டும் என்று நகராட்சித் தலைவர் பதில ளித்தார்.

துணைத் தலைவர் செல்வமணி பேசு கையில், நகராட்சியில் நிரந்தர தூய் மைப்பணியாளர்கள் பணிக்கு வராமல் மாற்று நபர்களை நியமித்துள்ளனர். அவர்கள் சரியாக பணி செய்யாததால் நக ராட்சியில் தூய்மை பணிகள் பாதிக்கப் பட்டுள்ளது. அவ்வாறு மாற்று நபர்களை நியமித்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்வாய்களை அள வீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வில்லை என்றால் பிரச்சனைக்கு தீர்வு ஏற்  படாது என்றார்.  திருவில்லிபுத்தூரில் சர்வே பணிகள்  தாமதம் நிலவுவதால் பணிகள் பாதிக்கப் பட்டுள்ளது. உயர் அதிகாரிகளிடம் பேசி  கூடுதல் பணியாளர்கள் நியமிக்க நட வடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சித் தலைவர் கூறினார்.  சுகாதார அலுவலர் கூறுகையில், தூய்மைப்பணியாளர்கள் மாற்று பணியா ளர்களை நியமித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  சிவகுமார் (திமுக) பேசுகையில், திரு ல்லிபுத்தூர் மார்க்கெட்டில் ஒரு வாரமாக குப்பை அகற்றப்படாததால் சுகாதார சீர் கேடு நிலவுகிறது என்றார்.  ஒப்பந்தம் முடிந்ததால் ஒரு வாரமாக தனியார் அமைப்பினர் தூய்மை பணி களில் ஈடுபடவில்லை. குப்பையை அகற்ற  நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சித் தலைவர் கூறினார்.  இக்கூட்டத்தில் 109 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.