districts

img

நிரந்தரத் தீர்வாக மழைநீர் வடிகால்கள் அமைக்க நடவடிக்கை

அமைச்சர் கீதாஜீவன் தகவல் தூத்துக்குடி, டிச.9- தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழைநீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக மழை நீர் வடி கால்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் கீதாஜீவன் தெரி வித்தார்.  தொடர் மழையின் காரண மாக தூத்துக்குடி மாநகராட்சி பகு தியில் பிரையண்ட் நகர், சிதம்பர நகர் 5வது தெரு, வ.உ.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முத்துகிருஷ்ணா நகர், பி அண் டி காலனி, பண்டாரம்பட்டி கால் வாய், ஆதிபராசக்தி நகர், டிஎஸ்எப் கார்னர் ஆகிய பகுதி யில் தேங்கியிருந்த மழை நீரை வெளியேற்றும் பணிகளை சமூக  நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் வியாழனன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, ஆகியோர் உடனிருந்தனர்.