சிவகங்கை, ஜன.3- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தொடர் போராட்டத்தால் 75 ஆண்டுகளுக்கு பிறகு சிவ கங்கை மாவட்டத்தில் 3 கிராமங்க ளுக்கு அரசுப் பேருந்துகள் இயக் கம் ஜனவரி 3 அன்று தொடங்கப் பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காளை யார் கோவில் தாலுகா குருந்தங் குடி, சூரக்குடி, முடிதானை ஆகிய கிராம மக்கள் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பு கடந்த 75 ஆண்டு கால மாக போக்குவரத்து வசதி இல்லா மல் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். 3 கிராம மக்கள் மட்டுமல்ல இக் கிராமங்களை சுற்றியுள்ள பத்து கிராம மக்களுக்கு பேருந்து போக்குவரத்து வசதியை செய்து தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தொடர்ந்து மனு அளிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 28.11.2022 சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து 22 .11. 2022 அன்று காளையார் கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட் டாட்சியர் தலைமையில் பேச்சு வார்த்தை நடந்தது. அந்த பேச்சு வார்த்தையில் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதாவது குருந்தங்குடி, சூரக்குடி, முடிதானை ஆகிய கிராமங்களுக்கு நகர பேருந்து வசதி செய்துதருவது என்றும் சிவகங்கையில் இருந்து ஆனந்தூர் செல்கிற பேருந்தை சிவகங்கை யிலிருந்து சிலுக்கபட்டி, கலைக் குளம் கிராமங்கள் வழியாக சென்று வருவதற்கும் அரசு போக்கு வரத்துக் கழகம் ஏற்றுக்கொண்டு செயல்படுத்துவதாக உறுதி அளித்தது. இந்த உறுதியின் அடிப் படையில் ஜனவரி 3 அன்று சூரக்குடி யில் அரசுப் பேருந்து இயக்கம் துவக்க விழா நடைபெற்றது. விழா வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் தண்டி யப்பன் கொடியசைத்து துவக்கி வைத்தார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்புச் சாமி, ஒன்றிய செயலாளர் தென்ன ரசு, அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள், மாவட்டக்குழு உறுப் பினர்கள் மெய்யப்பன், அண் ணாத்துரை, தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் ஒன்றிய செயலா ளர் சாத்தப்பன், ஒன்றிய தலைவர் திருநாவுக்கரசு, ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், காளையார் கோவில் ஒன்றிய குழு உறுப்பி னர்கள் சீனிவாசன், ஜோதிநாதன், சலேத்ராஜ்,சங்கரலிங்கம்,பாலா சீத்தாராமன்,அற்புதம் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்ட னர்.