மதுரை, டிச.28- தொடர் போராட்டத்தால் நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்களின் கோரிக் கைகளை நிறைவேற்றுவதாக நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. மதுரை நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பரமரிப்பு கோட்டப் பொறியாளரை கண்டித்தும் சாலைப்பணியாளர் நலன் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுக்கும் போக்கை கண்டித்தும், சாலைப்பணி யாளர்களில் முதுநிலைப்பட்டியல் வெளி யிட்டதில் முரண்பாடு விதிமீறல் அடிப்படை யில் முதுநிலைப்பட்டியலை தமிழ்நாடு சார் நிலை பணி அமைப்பு வீதிகள் 35, 35a அடிப்ப டையில் முதுநிலைப்பட்டியலை முறைப் படுத்தி வெளியிட வேண்டும் என்று வலி யுறுத்தியும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்றது. செவ்வாயன்று இரவு முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மதுரை கோட்ட பொறியாளர் தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசினார். ஒன்று மற்றும் மூன்று முதல் ஏழு வரை உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகபட்சம் இரண்டு மாத காலத்தில் விதி களுக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என்றும் மேலும் வரிசையில் இரண்டில் உள்ள கோரிக்கையினை ஒரு வார காலத்திற்குள் நிறைவேற்றுவது என்று ஒப்புதல் அளித்தார். இதனைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப் பட்டது. புதனன்று நடைபெற்ற போராட்டத் தில் மாநில தலைவர் மா. பாலசுப்பிர மணி, மாநிலச் செயலாளர் ஹரி கிருஷ்ணன், மாநில பொருளாளர் இரா. தமிழ், மாவட்டத் தலைவர் மனோகரன், மாநில துணைத் தலைவர் ராஜமாணிக்கம், மாவட்டச் செய லாளர் வே.சோலையப்பன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் க. நீதி ராஜா, மாவட்ட பொருளாளர் நா.முருகன் உள்பட மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.