districts

img

செல்லூர் - குலமங்கலம் சாலையில் கோ.தளபதி எம்எல்ஏ ஆய்வு

பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

மதுரை, மே 21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையால் செல்லூர் - குலமங்கலம் சாலையில்  கோ. தளபதி  எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். செல்லூரிலிருந்து கோசாகுளம் வரை குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டப்பணி கடந்த ஒன்றரை  ஆண்டு காலமாக நடந்து வரு கிறது. தற்போது வரை திட்ட வேலைகள் மந்தமான முறை யில் நடைபெற்று வருகிறது . இப்பகுதியில்  சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி நேரில் ஆய்வு செய்து பணி களை விரைந்து முடிக்க  நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின்  மதுரை மாநகர் வடக்கு  - 1, 2 ஆம்  பகுதிகுழுக்கள் சார்பில் நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.  இதனைத்தொடர்ந்து சனிக்கிழமையன்று வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் கோ. தளபதி ஆய்வு  மேற்கொண்டு, பணிகள் தாமதமாகாமல் நடைபெற  வேண்டும் .விரைவில் சாலைகளை சீரமைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி அதி காரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இரண்டு வாரங்களில் சாலை களை சீரமைப்பதற்கான நட வடிக்கைகள் மேற்கொள் ளப்படும்.மற்ற பணிகள் விரைவில் முடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படும் என்று மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டது. மாநகராட்சி  ஆணையா ளர் சிம்ரன்ஜித் சிங், துணை மேயர் டி. நாகராஜன், மாநக ராட்சி செயற் பொறியாளர் அரசு, வடக்கு மண்டல ஆணையாளர் வரலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.  இதில்  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செய லாளர் மா. கணேசன், மாநி லக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், பகுதிக்குழு  செயலாளர்கள் வடக்கு - 2  ஏ. பாலு, வடக்கு - 1   வி.  கோட்டைச்சாமி மாவட் டக்குழு உறுப்பினர்கள்  கே.  அலாவுதீன், மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல்  ஆகியோர் பங்கேற்றனர்.