districts

மதுரை முக்கிய செய்திகள்

மலையில் தீ பரவுவதால் சதுரகிரி கோவிலுக்குச் செல்ல தடை

திருவில்லிபுத்தூர், ஜூலை 29- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் - மேக மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது.  அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில்  மட்டுமே பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனு மதி அளிக்கப்படும்.  இந்நிலையில் மலைப்பகுதியில் காட்டுத்தீ பரவுவ தால் ஞாயிறன்று பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்  பட்டுள்ளது.

மகளிர் உரிமைத்திட்டம் ஆக.3, 4 மதுரை மாவட்டத்தில் சிறப்பு முகாம்:  ஆட்சியர் அறிவிப்பு

மதுரை, ஜூலை 29- மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்  களின் அறிவிப்பிற்கிணங்க கலைஞர் மகளிர் உரிமை  திட்டத்தை செயல்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள் ளன. இத்திட்டத்தில் முதற்கட்டமாக ஆறு வருவாய் வட்டங்களில் கடந்த 24.07.2023 முதல் விண்ணப்பங்களை பதிவு செய்யும் பணி 616 நியாய விலைக்கடை வாரியாக அமைக்கப்பட்டுள்ள 1187 முகாம்களில் நடைபெற்று வரு கிறது. மேற்கண்ட முகாம்கள் மூலமாக இன்று வரை  2.34,785 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. தற்போது  குடும்ப அட்டை குறைவாக உள்ள நியாய விலைக்கடை களின் முகாம்களை நிறைவு செய்ய அரசு சுற்ற றிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கள்ளிக்குடி வட்டத்தில் 39, மதுரை கிழக்கு வட்டத்தில் 63,  மதுரை தெற்கு வட்டத்தில் 53, மதுரை மேற்கு வட்டத்தில்  74, திருமங்கலம் வட்டத்தில் 61, வாடிப்பட்டி வட்டத்தில்  77 நியாய விலைக்கடை முகாம்கள் 28.07.2023 தேதியுட னும், 29.08.2023 அன்று 174 நியாய விலைக்கடை முகாம்  களும், 30.07.2023 அன்று 75 நியாய விலைக்கடை முகாம்  களும் நிறைவு செய்யப்பட உள்ளது. இதில் விடுபட்ட விண்ணப்பதாரர்களை பதிவு செய்வ தற்காக வரும் 03.08.2023 மற்றும் 04.08.2023 ஆகிய தேதி களில் மீண்டும் அதே இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளது. எனவே, விடுபட்ட விண்ணப்பதாரர்கள் மேற் கண்ட முகாம்களை தவறாமல் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலை வர் மா.சௌ.சங்கீதா தெரிவித்துள்ளார்.

பெண் சார்பு ஆய்வாளரின் கணவர் தற்கொலை

தேனி, ஜூலை 29- தேனி அருகே அம்மாபட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்த வர் சேகர் (39). இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பணிஓய்வு பெற்றார். இவரது மனைவி பிரபா ஜெயமங்கலம் காவல்நிலையத்தில் சார்பு  ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஓய்வு பெற்ற போது கிடைத்த பணத்தின்  மூலம் நண்பர்களுடன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நடத்தி  வந்துள்ளார். இதில் நஷ்டம் ஏற்பட்டதால் மனைவிக்கும் இவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் குடும்பத்தைப் பிரிந்து லட்சுமிபுரத்தில் கோழிக்கடை வைத்து நடத்தி வந்தார். பல ஆண்டுகளாக பணிபுரிந்து ஓய்வின் போது கிடைத்த பணம் முழுவதும் விரயமாகி விட்டதே என்ற  கவலையில் இருந்தவர் வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து  அல்லிநகரம் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் வழக்கு  பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

டி.எஸ்.பி அலுவலகத்தில் மயங்கி விழுந்த தலைமை காவலர் மரணம்

தேனி, ஜூலை 29- பாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவல கத்தில் மயங்கி விழுந்து தலைமை காவலர் இறந்தது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள். தேனி மாவட்டம், கூடலூர் தெற்கு காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்தவர் அபுகனி(43). இவர்  உத்தமபாளையம் உட்கோட்ட காவல் உதவி கண்கா ணிப்பாளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு பணி யில் இருந்துள்ளார். அதிகாலையில் திடீரென மயக்கம்  வருகிறது என்று கூறியவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனிருந்த முதல்நிலைக்காவலர் உமாநாத் அவரை  ஆட்டோவில் சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.ஆனால் வழி யிலே அபுகனி உயிரிழந்தார். இது குறித்து உத்தமபாளை யம் காவல் ஆய்வாளர் சிலைமணி வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகிறார்.