districts

img

தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்

திருவில்லிபுத்தூர்,அக்.15- காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் மலைக்  குறவன் (எஸ்.டி) சான்றி தழ் கேட்டு மனு கொடுத்தும் வழங்கப்படாத வேதனை யில்  வேல்முருகன் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அவ ரது குடும்பத்திற்கு சாதி  சான்றிதழ் மற்றும் நிவார ணம், அரசு வேலை வழங்க  கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி விருதுநகர் மாவட்டக்குழு சார்பில் திரு வில்லிபுத்தூரில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மாவட்ட துணைச்செய லாளர் எஸ்.வி.சசிகுமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முத்துக்  குமார், மாவட்டச் செயலா ளர் முருகன்.பழங்குடியினர் பாதுகாப்பு இயக்கம் சார் பில் முருகேசன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் ஜோதிலட்சுமி,  வீரசதானந்தம் , சிறுபான்மை நலக்குழு மரியடேவிட், மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் ஜெயக்  குமார் மற்றும் வனவேங்கை கட்சி சீனிவாசன் ஆகியோர் பேசினர்.