தேனி, டிச.3- அரசு வேலையை பறிக்கும் அரசாணை 152 ஐ ரத்து செய்யவேண்டும் என தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பிரதி நிதித்துவப் பேரவை வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் பேரவை மாவட்டத் தலைவர் பேயத்தேவன் தலைமையில் நடை பெற்றது. மாநில துணைப் பொதுச்செய லாளர் இரா.மங்கள பாண்டியன் துவக்கி வைத்து பேசினார். செயலாளர் அறிக்கை மற்றும் பொருளாளர் அறிக்கை மாவட்டச் செயலாளர் எஸ்.தாஜுதீன் சமர்பித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் எம். ராமச்சந்தி ரன் மற்றும் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட பொருளாளர் சிவமணி ஆகி யோர் வாழ்த்தி பேசினர். மாநிலத் துணைத் தலைவர் கோ.பழனியம்மாள் நிறைவுரை யாற்றினார். பேரவையில் முதல்வரின் காலை உணவு த்திட்டத்தை சத்துணவு ஊழி யர்கள் மூலம் நிறைவேற்ற வேண்டும் என் பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.