districts

img

சிஐடியு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம்,ஏப்.19-    தொழிற்சாலை சட்ட திருத்தங்களை கைவிட வேண்டும், போக்குவரத்தில் அவுட்சோர்சிங் முறை யில் ஆள் எடுப்பதை கைவிட்டு, வேலை வாய்ப்பு  அலுவலகங்கள் மூலம் ஆட்கள் எடுத்து காலிப்பணி யிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வு பெற்ற வர்களின் 85 மாத டி ஏ உடனடியாக வழங்க வேண்டும்  என்று வலியுறுத்தி இராமநாதபுரம் அரசு போக்கு வரத்து நகர் கிளை, மற்றும் புறநகர் கிளையில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர் கிளையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் துணைத் தலைவர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் துரைப்பாண்டி, தலைவர் ராஜா மணி உட்பட கலந்து கொண்டனர். புறநகர் கிளை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு கிளை தலைவர் செந்தில் தலைமை தாங்கி னார். மத்திய சங்க நிர்வாகிகள் முத்துக்குமார் பாஸ்கரன் செயலாளர் போஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இரண்டு கிளைகளிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் எம். சிவாஜி, மாவட்ட துணைச் செயலாளர் வி.பாஸ்க ரன், தனியார் மோட்டார் வாகன சங்க மாவட்ட  செயலாளர் எஸ்.ஆனந்த் ஆகியோர் உரையாற்றி னர். இராமேஸ்வரம் மற்றும் பரமக்குடி ஆகிய கிளை களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.