தேனி, மார்ச்.6- தேனி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் பாராட்டு தெரிவித்தார். பண்ணைப்புரம் பேரூராட்சி உதவி தலைவராக தேர்வு செய் யப்பட்ட எஸ்.சுருளிவேல், பெரிய குளம் நகராட்சி 13-ஆவது வார் டில் வெற்றி பெற்ற மதன்குமார், புதுப்பட்டி பேரூராட்சி 1-ஆவது வார்டில் வெற்றி பெற்ற பிரதீபா, ஆண்டிப்பட்டி 17-ஆவது வார்டில் வெற்றி பெற்ற வி.சின்னன் ஆகி யோருக்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்வில் மாநிலக் குழு உறுப்பினர் டி.வெங்கடேசன், மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண் ணாமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராமசந்திரன், சி.முருகன், கே.எஸ்.ஆறுமுகம், டி.கண்ணன், சு.வெண்மணி, இ. தர்மர், சி.முனீஸ்வரன், மாவட்டக் குழு உறுப்பினர் பி.முருகேசன் ஆகியோர் பங்கேற்றனர்.