திருவில்லிபுத்தூர், மே 9- இராஜபாளையம் பட்டு வளர்ச்சி துறை அலுவலகம் நுழைவு வாயிலில் யூகலிப்டஸ் மரம் காற்றுடன் பெய்த மழையால் விழுந்தது. அலுவலக போர்டு மற்றும் மின்கம்பிகள் விழுந்து போக்குவரத்துக்கு இடையூறானது. வன்னியம்பட்டி காவல் நிலையம் அருகில் ரோட்டில் இருந்த கருவேல மரமும் விழுந்துபோக்குவரத்து தடை பட்டது. இரண்டு மரங்களையும் தீயணைப்பு துறையினர் அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.