சிஐடியு மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் நடைபெற்ற சிறப்பு பேரவையில் சிஐடியு நடத்தும் நிர்மல் பள்ளிக்கு ரூ.5 ஆயிரம் நன்கொடை மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசனிடம் வழங்கப்பட்டது. மாநில துணைத் தலைவர் இரா. தெய்வராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் இரா. லெனின், பொருளாளர் ஜே. லூர்து ரூபி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.