districts

5 ஆண்டுகளாக திறக்கப்படாத ரயில்வே சுரங்கப்பாதை அதிகாரிகள் அடங்கிய கூட்டுக்கூட்டத்தை நடத்தி தீர்வுகாண்க! திண்டுக்கல் மாமன்ற கூட்டத்தில் சிபிஎம் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

திண்டுக்கல். ஜுன்.1

    திண்டுக்கல்லில் 5 ஆண்டுகளாக திறக்கப்படாமலும், வேலை நடைபெறா மலும் உள்ள கரூர் ரயில்வே கேட் சுரங்கப் பாதையை விரைந்து திறந்திட ஆட்சியர், ஆணையர், மேயர் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய கூட்டுக்கூட்டத்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று சிபிஎம் மாமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    திண்டுக்கல் மாமன்றக்  கூட்டம் மேயர் இளமதி தலைமையில் புதனன்று நடை பெற்றது. துணை மேயர் ராஜப்பா, ஆணை யர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் ஜோதிபாசு பேசுகையில், திண்டுக்கல் மாநகராட்சியில் எனது வார்டில் தெரு விளக்குகள்  எரியவில்லை என்று 15 மாதங்க ளுக்கு முன்பு மனு கொடுத்தேன். எல்லா மாமன்ற கூட்டத்திலும் இது குறித்து கேள்வி எழுப்பும் போதெல்லாம் டெண்டர் வைக்கப் பட்டுள்ளது; விரைவில் விளக்குகள் பொருத்தப்படும் என்று பதில் அளிக்கப்பட்டது. தற்போதைய கூட்டத்தில் கூட இதே பதில் தான் சொல்லப்படுகிறது. சந்தையில் 36 மரங்கள் வெட்டப்பட்டது. புதிதாக 360 மரங்கள் நடப்பட்டுள்ளது.    அதே போல் நத்தம் ரோடு தாலுகா அலுவலகம் அருகில் லாரி செட் அமைக்க வேண்டும் என்று கடந்த கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் லாரி பேட்டையாக அறிவிக்கப்பட்டுள்ளது அண்ணா வணிக வளாகம் அருகில் உள்ள  தனியார் உணவு விடுதி முன்பாக கார் பார்க்கிங் செய்யப்படுகிறது. இதனால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. எனவே அந்த கார் பாக்கிங்கை அப்புறப்படுத்தி பொதுமக்கள் பயன் படுத்தும் சாலையாக மாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.  

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் கே.எஸ்.கணேசன் பேசும் போது, திண்டுக்கல் நுழைவுவாயி லான கரூர் ரயில்வேகேட் சுரங்கப்பாதை 5 ஆண்டுகளாக வேலை நடக்காமல் உள்ளது. அதை உடனடியாக திறக்க வேண்டும். அதற்கு திண்டுக்கல் ஆட்சியர், மாமன்ற மேயர், துணை மேயர், ஆணையர் மற்றும் அப்பகுதி மாமன்ற உறுப்பினர்கள், குடி யிருப்போர் நலச்சங்க உறுப்பினர்கள் அடங்கிய கூட்டத்தை நடத்தி குறைகளை கேட்டு  சுரங்கப்பாதை பணிகளை விரை வில் முடித்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த காலம் கடுமையான வெயில் காலம் என்பதால்  பேருந்து நிலை யத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும். மாநகராட்சியில் உள்ள மிகப்பெரிய நிறுவ னங்களுக்கு முறைப்படி வரி போட வேண்டும். நிலுவையில் உள்ள மாநகராட்சி சிவில் வழக்குகளை விரைந்து முடிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பு களை அகற்றுகிறோம் என்ற பெயரில் பூ மற்றும் பழ வியாபாரிகளை அப்புறப் படுத்தக்கூடாது, ஆம்னி பேருந்துகளை முறைப்படுத்த வேண்டும் என்று பேசினார்.  

முறையாக வரி வசூல் செய்திடுக  

    சிபிஎம் மாமன்ற உறுப்பினர் மாரி யம்மாள் பேசுகையில், காந்தி மைதான சந்தை பகுதியில் கட்டப்பட்டுள்ள கழிப்ப றைகள் கடந்த 6 மாதங்களாக பயன்படுத் தப்படவில்லை. இதனால் சந்தைக்கு வரும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள். மேலும் மேற்கு ரதவீதி அரசமரம் பகுதியில் மாநக ராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடை கட்டியுள்ளவர்கள் வரி செலுத்துவதில்லை. நகராட்சியின் பழைய கடைகளை அகற்றி விட்டு புதிய கடைகள் கட்டி ஏற்கனவே வியாபாரம் செய்தவர்களுக்கு கடை வாட கைக்கு விட வேண்டும்.  முறையாக வரி வசூல் செய்ய வேண்டும். பழனி சாலையில் உள்ள லாரி செட்டை முறையாக செயல்படுத்த வேண்டும் என்று பேசினார்.  

    திமுக கவுன்சிலர் இந்திராணி பேசும் போது, எனது வார்டில் 4 கிணறுகள் தூர்வா ருவதற்காக ரூ.28 லட்சம் ஒதுக்கப் பட்டுள்ளது. மின் மோட்டார் பழுதாகி உள்ளது. பல கழிப்பறைகளுக்கு தண்ணீர் வருவதில்லை. மோட்டார் சரி செய்வதற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வார்டு பகுதி பாழடைந்து பகுதியாக உள்ளதால் பாம்புகளும் அதிகம் உள்ளன என்றார். இதற்கு பதில் அளித்து ஆணை யர் மகேஸ்வரி கூறும் போது, ஒரு கிணற்று க்கு ரூ.10 லட்சம் என்ற அளவில் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. முக்கியமாக மழை நீரை சேமிக்க வேண்டும் என்றார்.  அதிமுக உறுப்பினர் பாஸ்கரன் பேசும் போது, துணை மேயர் வார்டு பளிச் என்று உள்ளது. எங்கள் வார்டில் தெரு விளக்கு எரிவதில்லை என்றார்.

    அதற்கு பதில் அளித்து துணை மேயர் ராஜப்பா,  எனது வார்டுக்கு என்று ஒரு பைசா கூட நான் ஒதுக்கவில்லை. அனைத்தும் அதிமுக மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் அளித்து நிதி ஒதுக்கி உள்ளோம் என்பதை அதிமுக கவுன்சிலர் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.  திமுக கவுன்சிலர் ஜான் பீட்டர் பேசும் போது, மாநகராட்சிக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதை மீட்கச் சென்றால் மாநகராட்சி ஊழியர்க ளுக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். அந்த இடத்தை மாநகராட்சி நிர்வாகம் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    அதற்கு பதில் அளித்த ஆணையர், ஆக்கிரமிப்பாளர்கள் குறித்து ஆட்சியரிடம் புகார் செய்து நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மண்டலத்தலைவர் கார்த்தி பேசும் போது, திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் ஏழை எளிய வியாபாரிகள் அதிகம் பாதிக்கப்படுகிறாரத்கள். ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டுள்ளது.

     அதே சமயம் பெரிய நிறுவனங்கள், ஆம்னி பஸ்கள் ஆக்கிரமிப்பு பற்றி கண்டு கொள்ளவில்லை. பாரபட்சமற்று ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்றார். முன்னதாக போதை ஒழிப்பு தொடர்பாக மேயர் தலைமையில் மன்ற உறுப்பினர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். (நநி)