மதுரை, ஜன.8- மதுரை மாவட்டம் விரகனூர் சுற்றுச் சாலை அருகே 5 முக்கிய சாலைகள் சந்திக்கும் இட த்தில் அமைந்துள்ள தனியார் மதுக்கூடத்தை அகற்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாட்டுத்தாவணியிலிருந்து விருது நகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் விரகனூர் சுற்றுச் சாலை வழியாக செல்லும். இப்பேருந்துகள் அனைத்தும் விரகனூர் அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்லும். இதனால், அங்கு பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பேருந்து நிறுத்தத்திற்கு அருகே தனியார் மதுபான கூடம் பெயர் பலகை எதுவும் இன்றி செயல்பட்டு வரு கிறது. மதுபானம் கூடத்திற்கு மது அருந்த வரும் மதுப்பிரியர்கள், தங்களது இருசக்கர வாகனத்தை பேருந்து நிறுத்த நிழற்குடை யில் நிறுத்தி செல்கின்றனர். மேலும் ஒரு சிலர் மது அருந்திவிட்டு பேருந்து நிறுத்த நிழற்குடையில் அரை குறையாக கிடப்பது, பொதுமக்களுக்கு மற்றும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படு த்தும் விதமாக செயல்படுவது வழக்கமாக நடைபெறுகிறது. மது அருந்திவிட்டு செல் பவர்களால், 5 சாலைகள் சந்திப்பில் விபத்து ஏற்படும் சூழலும் உள்ளது. எனவே, தனியார் மதுக் கூடத்தினை அகற்றி பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்த வேண்டும் என மதுரை மாவட்ட நிர்வா கத்தினை பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.