மதுரை, ஏப்.9- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புத னன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியிருப்பதாவது:
“திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்ததில் பயனில்லை என்று பாமக தலைவர் அன்புமணி கூறியிருக்கிறார். அப்படி என்றால், எதற்காக பாமகவும், அன்புமணியும் மாறி மாறி திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
அத்துடன், “ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு நிலைப்பாடு எடுப்பது தான் பாமகவின் அரசியல். நிலை யான கொள்கை இல்லாத கட்சி பாமக” என்றும் சாடினார். “எம்எல்ஏ., எம்பி, பதவிகளுக்காகப் போட்டியிடுவது வாரிசு அரசியல் ஆகாது. கட்சியின் தலைவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பது தான் வாரிசு அரசியலாகும்” என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, “இன்று கட்சியில் ஒருவர் பதவி வகித்தால் நாளை வேறொருவர் அந்தப் பதவிக்கு வருவார். அது குடும்ப அரசியல் அல்ல. எனக்கு பின்னால் ஒரு சாதாரண தொண்டன் தான் தலைமை பொறுப்புக்கு வருவார்” என்றும் தெரிவித்தார்.