திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடியில் ரூ.6 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய நவீன பேருந்துநிலையத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெள்ளியன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்கள் பேருந்தில் ஏறிச்செல்லும் வழியில் கடைகளை வைக்க அனுமதிக்க கூடாது என்றும் பேருந்துநிலையத்திற்கு சுற்றுச்சுவர் சிறப்பான முறையில் கட்ட வேண்டும் என்றும் அமைச்சர் உத்தரவிட்டர். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் விசாகன் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மனோரஞ்சிதம், ஒன்றிய பெருந்தலைவர் ப.க.சிவகுருசாமி, உட்பட பலர் கலந்துகொண்டனர்.