மதுரை,நவ.5- மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை கண்காணிப்பு குறைதீர்க்கும் மையத்தின் புதிய தொலை பேசி எண் மற்றும் மென் பொருள் சேவையினை தமிழக நிதி-ம் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பி.டி. ஆர்.பழனிவேல் தியாகரா ஜன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களது குறைகளை மாநகராட்சி யின் பொது மக்கள் குறை தீர்க்கும் முகாம், மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் முகாம் மற்றும் சிறப்பு முகாம்களில் மனுக்கள் கொடுத்து வருகின்றனர். தற்போது உள்ள புதிய தொழில் நுட்பத்தின் அடிப்ப டையில் புகார்களை உட னுக்குடன் நிவர்த்தி செய்வ தற்கு புதிய தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் எண். +91 787 166 1787 என்ற புதிய எண் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. இந்த கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படும். பொதுமக்கள் தங்கள் புகார்களை தொலைபேசி அழைப்பு மூல மாகவும், வாட்ஸ்அப் மூல மாகவும் மற்றும் www.mdu corpicts.com என்ற மதுரை மாநகராட்சி இணையதளம் மூலமாக தங்களது தொலை பேசி எண் மூலம் பதிவு செய்து புகார் தெரிவிக்க லாம். புகார் பதிவு செய்யப் பட்டவுடன் புகார் ஒப்புகை எண் ஒன்று உருவாக்கப் பட்டு பதிவு செய்த தொலை பேசி எண்ணிற்கு குறுஞ் செய்தி அனுப்பப்படும். அந்த ஒப்புகை எண் மூல மாக புகாரின் நிலையை ஆன்லைனில் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம். புகார்கள் பதிவு செய்யப் பட்டவுடன் தானியங்கி முறை யில் புகாரின் வகைக்கு ஏற்ப மாநகராட்சியின் சம் பந்தப்பட்ட அலுவலர்க ளுக்கு புகாரின் விபரங்கள் தெரிவிக்கப்படும். பெறப் பட்ட புகார்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் அளிக்கப்படவில்லை எனில் அடுத்த நிலையில் உள்ள அலுவலர்களுக்கு புகார்கள் அனுப்பப்படும்.
புகார்கள் நிறைவடையவில்லை எனில் ஆணையாளரின் மேற் பார்வைக்கு கொண்டு செல்லப்படும். பொதுமக்கள் அளிக் கும் புகார்களுக்கு பதில் அளிக்க ஏதுவாக ஐசிடிஎஸ் மொமைல் செயலி (ICTS Mobile App) மற்றும் இணையதளத்தில் லாகின் ஐடி/ பாஸ்வேர்டு (Login ID / Password) மாநகராட்சி அலுவலர்கள் பயன் படுத்துவதற்கு உருவாக்கப் பட்டுள்ளது. மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்க ளிடமிருந்து பெறப்பட்ட புகார்களுக்கு நடவடிக்கை எடுத்ததற்கான பதில் அறிக்கையினை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்த வுடன் பொதுமக்களின் தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும். பொதுமக்கள் தாங்கள் அளித்த புகார் மீதான எடுக்கப்பட்ட நடவடிக்கை யின் பதிலை தெரிந்து கொண்டு பதில் திருப்திகர மாக இருந்தால் அவர்கள் நட்சத்திர மதிப்பீடு மூல மாக கருத்துக்களை பதிவு செய்யலாம். இந்நிகழ்வில் துணை மேயர் தி.நாகராஜன், மண்ட லத் தலைவர்கள் சரவண புவனேஸ்வரி, பாண்டிச் செல்வி, முகேஷ் சர்மா, துணை ஆணையாளர் முஜிபூர் மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.