districts

img

காப்பீட்டுக்கழக ஊழியர்களின் வேர்களைத் தேடி பயணம்

மதுரை, ஜன.18-  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை காப்பீட்டுக் கழக ஊழியர் வேர்களை தேடி பயணத்தை மேற்கொண்டனர்.  பத்து ஆண்டுகளுக்கு முன் இப்பய ணத்தை கீழக்குயில்குடியில்   மறைந்த சட்ட மன்ற உறுப்பினர் என்.நன்மாறன்  துவக்கி  வைத்தார். இந்த பயணத்தில் இன்சூரன்ஸ் ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர்  பங்கேற்றனர். தொல்லியல் அறிஞர்  ஆத்ம நாதன் வரலாற்றுத் தொன்மைகளை எடுத்து ரைத்தார். தமுஎகச மதுரை மாவட்ட தலைவர் கா.  இளங்கோவன், மாநிலக் குழு உறுப்பினர்  அ. ந .சாந்தாராம், மதுரை கோட்ட இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்க துணைத் தலைவர் பி.மகாலிங்கம், மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் வி.ரமேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கே.சர வணன் நன்றி கூறினார்.