districts

மதுரை முக்கிய செய்திகள்

பட்டதாரி இளம்பெண்  தீக்குளித்து தற்கொலை

தேனி, டிச.29- போடியில் பட்டதாரி இளம்பெண் தீக்குளித்து தற் கொலை செய்து கொண்டார்.   தேனி மாவட்டம், போடி சடையாண்டி நகரை சேர்ந்தவர்  முருகன் மகள் அர்ச்சனா (23). இவர் பி.காம் படித்துள்ளார். இவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்துள்ளனர்.  இந்நிலையில் சில நாட்களாக சோகமாக இருந்துள் ளார். புதன்கிழமை இரவு 10 மணியளவில் மொட்டை மாடிக்கு சென்றவர் நீண்ட நேரம் வராததால் பெற்றோர் மேலே சென்று பார்த்துள்ளனர். அங்கு அர்ச்சனா உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த நிலையில் இறந்து  கிடந்துள்ளார். இதுகுறித்து அர்ச்சனாவின் தந்தை முருகன்  (52) போடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

ஜன.4 தேனியில் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநரை கண்டித்து போராட்டம்

தேனி, டிச.29-  தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்  கத்தின் தேனி மாவட்டத் தலைவர் பா.ஜெகதீசன், மாவட்டச் செயலாளர் சு.தாமோதரன் ஆகியோர் மாவட்ட ஆட்சி யருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  வளர்ச்சித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டப்பணி களை மேற்கொள்வதற்கு உரிய கால அவகாசங்கள் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டும், காலநிலைகளை கணக்  கில் கொள்ளாமலும், அளிக்கப்பட்டுவரும் கடுமையான நெருக்கடிகளை கைவிடக் கோரியும் பல முறை கோரிக்  கைகள் வைத்துள்ளோம். இந்நிலையில் தேனி மாவட்ட திட்ட இயக்குநரின் ஊழி யர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து டிசம்பர்  29 முதல்  ( PMAY Inter Block Verification) பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்துவது எனவும், ஜனவரி 4 அன்று ஒரு நாள் ஒட்டு மொத்த சிறு விடுப்பு போராட்டம் நடத்துவது எனவும்  முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
 

பூட்டிய வீட்டில் நகை பணம் திருட்டு

சிவகாசி, டிச.29- சிவகாசி அருகே பூட்டிய வீட்டில் நகை மற்றும் பணத்தை  திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். சிவகாசி அருகே உள்ள காமராஜபுரம் காலனியைச் சேர்ந்தவர் மங்கேஸ்வரி (55). இவர் தனது கணவர் சக்தி வேலுடன் வெளியூர் சென்றார். மறுநாள்  திரும்பி வந்து  பார்த்த போது, வீட்டின் முன் பக்க கதவு உடைந்திருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்த  போது, அலமாரியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 4 பவுன்  தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.30 ஆயிரம் ஆகியவை  திருடு போனது தெரியவந்தது.  இதுகுறித்து மங்கேஸ்வரி,  சிவகாசி நகர் காவல்  நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார்  வழக்குப் பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகின்ற னர்.

ஆவின் ஊழியர் தற்கொலை 

திருவில்லிபுத்தூர், டிச.29-  விருதுநகர் மாவட்டம்,திருவில்லிபுத்தூர் அருகே உள்ள கம்பத்துப்பட்டி வடக்கு தெருவில் வசிப்பவர் முனி யாண்டி (வயது 54). இவர் திருவில்லிபுத்தூர் மதுரை ரோட்டில் உள்ள ஆவின் பாலகத்தில் ஊழியராக வேலை  பார்த்து வந்தார்.  சம்பவத்தன்று முனியாண்டி கம்பத்துப்பட்டி டாஸ்மாக் கடை அருகே மதுவில் பூச்சிக்கொல்லி மருந்து  குடித்துவிட்டு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந் துள்ளார்.உடனடியாக அவரது உறவினர்கள் அவரை மீட்டு  திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். ஆனால் சிகிச்சை பலனின்றி முனியாண்டி உயிரி ழந்தார். இதுகுறித்து அவர் மகன் வினோத்குமார்  அளித்த  புகாரின் பேரில் திருவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காமராஜர்  அணைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம்  சிசிடிவி கேமிரா பொருத்தி கண்காணிப்பு

சின்னாளப்பட்டி. டிச.29-    திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே,  ஆத்தூர்   காமராஜர் அணை பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் மக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.  திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே ஆத்தூர் காமராஜர் அணை மேற்கு பகுதியில், மேற்குத் தொடர்ச்சி  மலை உள்ளது. இந்த மலைப்பகுதியில் யானை, சிறுத்தை,  மான், காட்டு மாடு, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு  வன விலங்குகள் உள்ளன. இந்நிலையில், கடந்த 10 நாட்க ளுக்கும் மேலாக, மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து,  ஆத்தூர் காமராஜர் அணை பகுதிக்கு வந்து புதருக்குள்  பதுங்கி இருக்கும் ஒரு சிறுத்தை, அந்தப் பகுதியில்  அடிக்கடி நடமாடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,  கடந்த சனிக்கிழமை சடையாண்டி கோவில் அருகே ஒரு மானை சிறுத்தை கொன்று இழுத்து  சென்றதை அந்தப் பகுதி விவசாயிகள் பார்த்துள்ளனர்.  இதுகுறித்து, அந்தப்  பகுதி வனத்துறையினருக்கு விவசாயிகள் தெரிவித்தனர். அதன்படி, வனத்துறையினர்  சிறுத்தையை  பிடிக்க பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.  ஆனால்,  தொடர்ந்து அந்த பகுதியில் நடமாடும் சிறுத்தை கடந்த  மூன்று நாட்களுக்கு முன்பு, ஆடு மேய்த்துக் கொண்டி ருந்த,  ஆத்தூரை  சேர்ந்த தொத்தன்  மகன் நரி (40)  என்ப வரது  இரண்டு ஆடுகளை இழுத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் அக்கரைபட்டியைச் சேர்ந்த  வேல்முருகன் (40)  என்பவர் தென்னந்தோப்பில் காவ லுக்கு இருந்த ஒரு நாயை சிறுத்தை இழுத்துச் சென்றுள்  ளது.  இதனை பார்த்து விவசாயி வேல்முருகன் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆடு மேய்க்கும் மல்லையாபுரம்  பழனிச்சாமி (60) மற்றும் ஆத்தூர் காமராஜர் அணை பகுதி யில் குடியிருக்கும் ஆத்தூர் கணேசன் (70)  சித்தரேவு ராமர் (50) ஆத்தூரைச் சேர்ந்த அன்பு (32)  உள்ளிட்ட பல்வேறு  விவசாயிகள் இரவு நேரங்களில் சிறுத்தை நடமாடுவதை கண்டு பெரும் அச்சமடைந்து உள்ளனர்.   இந்நிலையில் புதன்கிழமையன்று வனத்துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் பிரபு  உத்தர வின் பேரில், கன்னிவாடி வன சரக அலுவலர் ஆறு முகம்  தலைமையில், சிறுத்தை நடமாடத்தை கண்கா ணித்து அதனை  பிடிப்பதற்கு சிசிடிவி  கேமிரா வேல்முரு கன் என்பவரது தோட்டத்தில் பொருத்தப்பட்டுள்ளது. 

புத்தாண்டை முன்னிட்டு  என்சிபிஎச் சார்பில் புத்தகக் கண்காட்சி

மதுரை, டிச.29-  2023 ஆம் ஆண்டை வரவேற்கும் வித மாக மதுரையில் நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்  நிறுவனம் (என்சிபிஎச்) சார்பில் சிறப்புத்  தள்ளுபடியுடன் கூடிய புத்தகக் கண்காட்சி விடிய விடிய நடைபெறவுள்ளது. 10 சத வீதம் முதல் 90 சதவீத தள்ளுபடியில் புத்த கங்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.  இறையன்பு ஐ.ஏ.எஸ்.  எழுதிய மூளைக்குள் சுற்றுலா ரூ.1500 மதிப்புள்ள புத்தகம் சிறப்பு விலையாக ரூ.1000 மற்றும்  இலக்கியத்தில் மேலாண்மை ரூ.1850 மதிப்புள்ள புத்தகம் சிறப்பு விலையாக ரூ.1400க்கு வழங்கப்படுகிறது. என்சிபிஎச் வெளியீடான அப்துல் கலாமின் நூல்க ளுக்கு சிறப்புத் தள்ளுபடியாக 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. கார்ல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் தேர்வு நூல்கள் (20 நூல்கள்), ரூ.2900 மதிப்புள்ள மூலதனம் புத்தகம் சிறப்பு விலையாக 2 ஆயிரம் ரூபாய்க்கும் பசு.கௌதமன் பெரியார் 5 தொகுதிகள், கம்பராமாயணம் 8 தொகு திகள், தமிழில்  மார்க்சிய செவ்வியல் 15  நூல்கள். சென்னை லௌகிக சங்கம் 5 தொகுதிகள் ஆகிய புத்தகங்கள் 30 சத வீத சிறப்புத் தள்ளுபடியில் வழங்கப்படு கிறது.  மார்க்சிம் கார்க்கியின் தாய் மற்றும் அவரது நூல்கள் அனைத்தும், ரஷ்ய இலக்  கிய நூல்களான போரும் அமைதியும், வீரம்  விளைந்தது, சகோதரிகள், சக்கரவர்த்தி பீட்டர், வரலாற்று நூல்களான முற்கால இந்தியா, நவீனகால இந்தியா, பண்டைக் கால இந்தியா, தமிழகத்தின் தலைச்சிறந்த எழுத்தாளர் நாட்டாரியலாளர் பேராசிரி யர் ஆ.சிவசுப்பிரமணியன். எஸ்.வி.ராஜ துரை, அ.கா.பெருமாள், டாக்டர் கு.சிவ ராமன், ராகுல் சாங்கிருத்யாயன் ஆகியோ ரின் புத்தகங்கள் 30 சதவீத சிறப்புத் தள்ளு படியில் வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்  கான நெஸ்ட்லிங் புக்ஸ் ஆப் இந்தியா பதிப்பக புத்தகங்கள் 30 சதவீத சிறப்புத் தள்ளுபடியிலும் தமிழ் இலக்கிய நூல் வரி சைகளான பாவாணர், சாமிசிதம்பரனார். பாரதிதாசன்,திரு.வி.க போன்றோரின் நூல்கள் 40 சதவீத சிறப்புத் தள்ளுபடி யிலும் வழங்கப்படுகிறது.  ரூ.1500க்கு மேல் புத்தகம் வாங்கு பவர்களுக்கு மேகதாசன் எழுதிய “நல்ல தொரு வீணைசெய்தே” புத்தகம் அன்பளிப்  பாக வழங்கப்படுகிறது. 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் புத்தகம் வாங்குபவர்களுக்கு “உங்  கள் நூலகம்” மாத இதழ் ஓராண்டுக்கான சந்தா இலவசமாக சேர்க்கப்படும் என்று  நிறுவனத்தின் மண்டல மேலாளர் அ. கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் வராததைக் கண்டித்து விருதுநகர் நகர்மன்றக் கூட்டம் ரத்து

விருதுநகர், டிச.29- விருதுநகரில் நகராட்சிக் கூட்டத்திற்கு தொடர்ந்து அதிகாரிகள் வருவது இல்லை. இதனைக் கண்டித்து சாதாரணக் கூட்டம் வியாழனன்று இரத்து செய்யப்பட்டது. 30 தீர்மானங்கள் கிடப்பில் போடப்பட்டன. விருதுநகர் நகராட்சியின் மாதாந்திர சாதாரணக் கூட்டம் டிசம்பர் 29 வியா ழக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களுக்கும் 3 நாட்களுக்கு முன்பே தகவல் தெரிவிக்  கப்பட்டிருந்தது. மேலும், 30 மன்றப் பொருள் குறித்து விவாதித்து முடிவு செய்யவும் அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் வியாழனன்று மாலை 4 மணிக்கு  நகர்மன்றத் தலைவர் இரா.மாத வன், துணைத்தலைவர் தனலட்சுமி உட்பட பெரும்பான்மையான உறுப்பினர்கள் நக ராட்சியில் கூட்டம் நடைபெறக் கூடிய இராஜா மாளிகை பெருந்தலைவர்  காம ராஜர் கூடத்தில் கூடியிருந்தனர். மாலை 4.25 மணி  ஆன நிலையிலும்,  நக ராட்சி ஆணையாளர் ஸ்டான்லிபாபு மற்றும் பொறியாளர் மணி உட்பட உயர் அலு வலர்கள் யாரும் கூட்டத்திற்கு வரவில்லை. எனவே,  இதுகுறித்து நகராட்சித் தலை வரிடம் உறுப்பினர்கள் பலர் கேள்வி எழுப்பி னர். அதற்கு ஆணையாளர் உள்ளிட்ட அலு வலர்கள் உயர் அதிகாரிகள் தலைமையில் நடைபெறும் காணொலிக் காட்சி கூட்டத் தில் கலந்து கொண்டிருப்பதாக தகவல் தெரிவித்தார். அப்போது உறுப்பினர்கள், கடந்த மாதம் நடைபெற்றக் கூட்டத்தின் போதும் ,ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் யாரும் வரவில்லை எனப் புகார் தெரி வித்தனர். அதற்கு  தலைவர், கடந்த மாதம் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு சென்றிருந்தனர் என பதில் கூறினார். இதையடுத்து, ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் தினசரி  இரவு பகல்  என எப்போதும்  காணொலிக் காட்சி கூட்டத்  திலேயே கலந்து கொண்டே இருக்கின்ற னர். அப்படியென்றால் தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் பிரதிநிதிகள், பொது மக்கள் எப்படி அவர்களை சந்தித்து குறைகளை நேரடியாக தெரிவிக்க முடியும். மேலும், மக்கள் பிரதிநிதிகளுக்கு என்ன மரியாதை உள்ளது. “தலைவரிடம் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார் செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டி யது அதிகாரிகள் தான்“. எனவே, அவர்கள் என்றைக்கு வருகிறார்களோ அன்றைக்கு  கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யுங்கள், அதுவரை கூட்டத்தை ஒத்தி வையுங்கள். இந்தக் கூட்டத்தை ரத்து செய்யுங்கள் என  பெரும்பாலான உறுப்பினர்கள் தெரிவித்த னர். எனவே,  வேறு வழியின்றி கூட்டம் ரத்து  செய்யப்படுவதாக நகர்மன்றத் தலைவர் அறிவித்தார். பின்பு,  அனைத்து உறுப்பி னர்களும் கூட்டம் நடைபெறும் இடத்தை விட்டு வெளியேறினர்.

தோழர் ஏ.முருகேசன் மறைவு:கட்சியினர் அஞ்சலி 

மதுரை, டிச.29-  மதுரை மாவட்டம் கைலாசபுரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தோழர் முருகேசன் ( வயது 62) அவர்கள் டிசம்பர் 28 புதனன்று காலமானார். அவரது உடலுக்கு  கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலையணி வித்து அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர்  வடக்கு - 1ஆம் பகுதிக்குழு கைலாசபுரம் கிளைச் செயலாள ராக செயல்பட்டவர்.  கட்சியின் மாவட்டக் குழு அலு வலகத்தில் இரவுக்காவலராகவும் பணியாற்றியவர்.  மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணே சன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மூத்த தலைவர்  சி.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பி னர்கள்  இரா.விஜயராஜன், எஸ். பாலா,துணை மேயர் தி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜா. நர சிம்மன், அ.ரமேஷ், எம்.பாலசுப்பிரமணி. இரா.லெனின்,  ஆர். சசிகலா, ஜெ. லெனின், வை.ஸ்டாலின், டி. செல்வ ராஜ், சிஐடியு மாவட்டத் தலைவர் இரா. தெய்வராஜ், புற நகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.ரவி மற்றும்  கட்சியினர், பல்வேறு சங்கத்தினர்  மேலக் கைலாசபுரம்  இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு மாலை யணிவித்து அஞ்சலி செலுத்தினர்.  மறைந்த தோழர் முரு கேசனுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.  இரங்கல்  கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பெ.சண்முகம், உ.வாசுகி, மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் கே.கனக ராஜ், மதுக்கூர் ராமலிங்கம், எஸ்.நூர்முகம்மது, எஸ்.கண்ணன், விவசாயத்தொழிலாளர் சங்க மாநிலத் தலை வர் ஏ.லாசர், மாநிலக்குழு உறுப்பினர்கள் வாலண்டினா, ராஜசேகர், மாரியப்பன் ஆகியோர் தோழர் முருகேசன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

மூத்த தோழர்  டி.கே.சுப்ரமணியன் காலமானார் 

மதுரை, டிச.29- மதுரை மாவட்டம் மீனாட்சி நகர்  பகுதியை சேர்ந்த   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும்  தோழர் டி.கே.சுப்பிரமணியன் (வயது 74)  காலமானார்.  சிஐடியு  கைத்தறி நெசவு தொழிலாளர் சங்கத்தில் இருந்து கைத்தறி நெசவுத் தொழிலாளர்  நலன்களுக்காக பல்வேறு போராட்  டங்களை நடத்தியவர். அவனியாபுரம் நகர்மன்ற உறுப்பி னராக இருந்தவர்.   தோழரது மறைவு செய்தியறிந்து கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக் குழு உறுப்பினர்  ரா.விஜராஜன்,  சிஐடியு நகர் மாவட்டத் தலைவர் இரா. தெய்வராஜ், மாவட்டச் செயலாளர் இரா.லெனின்,மூத்த தலைவர் சி.இராமகிருஷ்ணன், மாவட்டக் குழு உறுப்பி னர் டி.ஏ.இளங்கோவன், அவனியாபுரம் தாலுகா செயலா ளர் ஏ.தனபாலன், உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

மனைவி தற்கொலை:  கணவருக்கு 10 வருட சிறை 

திருவில்லிபுத்தூர்,டிச.29- அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன் பட்டி கிழக்கு தெருவில் வசிப்பவர் சரவணகுமார் (வயது  47). இவரது மகள் கார்த்திகை செல்வி  (வயது 19). இவர்  விருதுநகரில்  கல்லூரியில் படித்துள்ளார் .அப்போது அதே  ஊரைச் சேர்ந்த முனியாண்டி மகன் முருகன் (வயது 31)  என்ற கட்டிடத் தொழிலாளி கார்த்திகை செல்வியை காத லித்து வந்துள்ளார் அப்பொழுது  இரண்டு குடும்பத்தா ருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு முருகன், கார்த்திகை செல்வியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் முருகன் வேலைக்கு செல்லாமல் கூடுதலாக வரதட்சணை கேட்டு அடிக்கடி தொந்தரவு  செய்துள்ளார். இதனால் மனமுடைந்த கார்த்திகை செல்வி  கடந்த 7.7.2015 அன்று வீட்டில் தனது உடலில் தீ வைத்து  தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அருப்புக் கோட்டை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர். திருவில்லிபுத்தூரில் உள்ள  மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கினை விசாரித்து நீதிபதி பி பகவதி அம்மாள்,  மனைவியை தற்கொலை செய்ய தூண்டிய கணவன் முரு கனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் தரப்பில் மாவட்ட அரசு சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் எஸ் ஜான்ஸி ஆஜரானார்.

மின்கசிவால் மின்சாதனப் பொருட்கள் எரிந்து நாசம்

கடமலைக்குண்டு, டிச.30- தேனி மாவட்டம், கடமலைக்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் சங்கம்பட்டி தெருவில் உள்ள அவருடைய வீட்டில் மின்சாதன பொருட்கள் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார். வியாழக்கிழமை ராஜா வீட்டை பூட்டிவிட்டு தேனிக்கு சென்றிருந்தார். இந்நிலையில் மதியம் 2 மணி அளவில் மின் கசிவு காரணமாக ராஜா வின் வீட்டிற்குள் இருந்த கம்ப்யூட்டரில் தீ பற்றி எரிந்தது.  தொடர்ந்து அருகே இருந்த டிவி உள்ளிட்ட மின்சாதன பொருட்களில் தீ பரவியதால் வீட்டிற்குள் இருந்து கரும்பு கை வெளியேறியது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக கடமலைக்குண்டு தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீய ணைப்பு வீரர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்த 20 ஆயிரம் மதிப்புடைய கம்ப்யூட்டர், டிவி உள்  ளிட்ட மின்சாதன பொருட்கள் தீயில் கருகி வீணாகிய தாக தீயணைப்பு அலுவலர் முத்துக்குமார் தெரிவித்தார். 

ஜீப் ஓட்டுநர்  தற்கொலை

தேனி, டிச.29- தேனி மாவட்டம், போடி எஸ்.எஸ்.புரம் இரண்டாவது தெருவில் வசிப்பவர்   மோகன் (50). இவர் ,தோட்டத் தொழி லாளர்களை கேரளத்துக்கு ஜீப்பில்  ஏற்றிச் செல்லும் பணி யில் ஈடுபட்டு வந்தார். அடிக்கடி மது அருந்தி வந்ததால் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். டிசம்பர் 28  புதன்கிழமையன்று வழக்கம்போல் கேரளத்துக்கு சென்று  விட்டு வந்து தூங்கியுள்ளார். வியாழனக்கிழமை காலை யில் விஷம் சாப்பிட்டுவிட்டதாகக் கூறி மயங்கி விழுந்துள்  ளார். அவரை போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் உயிரிழந்தார். இது குறித்து மனைவி லட்சுமி (48) கொடுத்த புகாரின் பேரில்  காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்னை வளர்ச்சி வாரியம் மூலம்  விவசாயிகளுக்கு பயிற்சிகள் வழங்கிடுக!

விருதுநகர் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

விருதுநகர், டிச.29- தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் பல்வேறு பயிற்சிகளை தென்னை விவசாயி களுக்கு அளிக்க வேண்டும் என்று   விருது நகரில் நடைபெற்ற  குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விருதுநகர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெ. மேகநாதரெட்டி தலைமையில் நடை பெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர ஜெ.  ரவிகுமார், வேளாண் இயை இயக்குனர் உத்தண்டராமன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் செந்தில்குமார், நேர்முக உதவியாளர் சங்கர்.எஸ்.நாராயணன் ஆகி யோர் உட்பட பலர் பங்கேற்றனர். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு: விருதுநகர் மாவட்டத்தில் மட்டும்  தென்னை விவசாயம் 25 ஆயிரம் ஏக்க ரில் நடைபெறுகிறது.  தென்னை வளர்ச்சி  வாரியத்தில் பல்வேறு பயிற்சிகள் அளிக்  கப்படுகின்றன. ஆனால், விருதுநகர் மாவட்டத்தில் இப்பயிற்சி அளிக்கப்படு வதில்லை. எனவே, வேளாண்மைத்துறை யின் மூலம்   பயிற்சிகளை அளித்திட உரிய  நட வடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில்,  3 ஆயிரம் தென்னை  சார்பு தொழில்கள் உருவாக வாய்ப்புள் ளது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அ.விஜயமுருகன் கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்த வேளாண் அதிகாரி கள், இதுகுறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். மாநில அரசு 2022 கரும்பு அரவை பரு வத்திற்கு ரூ.195 மானியம் அறிவித்துள்ளது. அதை விரைந்து வழங்க மாவட்ட நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமி ழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராமச்சந்திரராஜா தெரிவித்தார். 2021-22 கரும்பு அரவை பருவத்திற் கான சிறப்பு ஊக்க தொகையாக  மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.195 என மொத்தம் ரூ.58,05,645 விவசாயிகளுக்கு விடுவிக்க உரிய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று வேளாண் அதிகாரி பதில் தெரிவித்தார்.   நெல் கொள்முதல் நிலையத்தில் முறை கேடு இல்லாமல் நடத்த வேண்டும்.  பெரும்  பாலான விவசாயிகளுக்கு பயிர்க்கடன்கள்  நகையை  அடமானமாக வாங்கிக் கொண்டு  வழங்கப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கத்தின்  செயலாளர்களை  இட மாற்றம் செய்ய  வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாளாக இருந்து வருகிறது. அதில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.முருகன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த இணை பதிவாளர் செந்தில்குமார்,  இதுவரை 31 பேரை இடம் மாற்றியுள்ளோம். வரும்  ஜனவரி மாதம்  மேலும்  50 செயலாளர்களை இடமாற்றம் செய்ய உள்ளோம் என பதில் கூறினார்.   பருத்தியை அரசே கொள்முதல் செய்திட வேண்டுமென இராஜபாளை யத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்த இணை இயக்கு நர், ‘நோட்டீ பைடு’ பயிரில் இருந்து பருத்தி எடுக்கப்பட்டு விட்டது.  இருப்பினும் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் மூலம் கொள் முதல் செய்ய  எடுக்க நடவடிக்கை எடுக்கப்  படும் என்றார். பின்பு பேசிய மாவட்ட ஆட்சியர், முதற்  கட்டமாக 16 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவங்கிட  அனுமதி அளிக்  கப்பட்டுள்ளது. கள ஆய்வுக்கு பின்பு  தேவைக்கேற்ப கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என தெரிவித்தார்.

திருப்பத்தூர் நூலகத்தில் போட்டி தேர்வுக்கு புத்தகங்கள் 

சிவகங்கை, டிச.29  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரறிஞர் அண்ணா நூல கத்தில் அரசு பொது நூலகத் துறை சார்பில் போட்டி தேர்வாளர்கள் பயன் பெறும் வகையில் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் உள்ளன. ஆராய்ச்சி மாணவர்கள் பயன்பெறும் வகையில் அனைத்துத் துறை சார்ந்த புத்தகங்களும் சட்ட வல்லுநர்கள் பயன்படுத்தும் சட்ட  நூல்கள் ,செந்தமிழ் இலக்கிய நூல்கள், மருத்துவ நூல்கள், சிறுவர் பிரிவு குடிமைப் பணி பயிற்சி பிரிவு உள்ளிட்ட ஏராளமான வகை சார்ந்த  புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பினை போட்டி தேர்வா ளர்களும் மாணவர்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென நூலகர் ஜெயகாந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று பழனியில்  பஞ்சமி நில மீட்பு மாநாடு கே.பாலகிருஷ்ணன் பங்கேற்கிறார்

திண்டுக்கல், டிச.29-  பழனியில் உபரி நிலம் மற்றும் பஞ்சமி நில மீட்பு மாநாடு டிசம்பர் 30 வெள்ளியன்று நடைபெறுகிறது.  இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச்செய லாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றுகிறார்.  திண்டுக்கல் மாவட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற் பட்ட பஞ்சமி நிலங்கள் உள்ளன. இதே போல உபரி நிலங்களும் உள்ளன. இந்த நிலங்கள் மீட்பு குறித்து பழனியில் சிறப்பு மாநாடு நடைபெறுகிறது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பாக மாலை  5 மணிக்கு மின்வாரிய திடலில் நடைபெறும் இந்த  மாநாட்டில் விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத்தலை வர் ஏ.லாசர், மாவட்டச்செயலாளர் அருள்செல்வன், மாவட்டத்தலைவர் பி.வசந்தாமணி,  தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் சாமிநடராஜன், மாவட்டச்செயலாளர் எம்.ராமசாமி, மாவட்டத்தலைவர் என்.பெருமாள் சிபிஎம் மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சி தானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்று கின்றனர்.