districts

img

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு செல்லும் அரசு பள்ளி மாணவி

சின்னாளபட்டி, மே 26- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் அய்யம் பாளையத்தை சேர்ந்தவர் மாணவி ஆர்.தாரணி. இவர் ஈரோடு அருகே உள்ள இராமநாதபுரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்.  கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வுடன் இணைந்து விண் வெளி ஆய்வு மேற்கொள் ளும் கியூபன் இன் ஸ்பேஸ் என்ற அமைப்பு பல்வேறு போட்டிகள் நடத்தியது. இதில் ஏ.ஜி.ஆர். கல்வி அறக்கட்டளையில் பயின்ற 11 மாணவர்கள் பயிற்சி பெற்றனர். இந்த மாணவர்க ளின் ஆராய்ச்சி திட்டம் கியூபன் இன் ஸ்பேஸ் அமைப்பால் அங்கீகரிக் கப்பட்டு நாசா மூலம் செயல் பட தேர்வு செய்யப்பட்டுள் ளது. இதற்கான பரிசோத னை ஜூன் 19 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதிக்குள் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடைபெற உள்ளது. இதனால் இந்த திட்டம் சார்ந்து மாணவ, மாணவிகள் மற்றும் அவர்க ளின் பயிற்சியாளர்களை நாசா விண்வெளி மையம் அழைத்துள்ளது. இதற்காக திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தை சேர்ந்த மாணவி ஆர்.தாரணி அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி மையத்திற்கு செல்கிறார்.  தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்  ஐ.பெரிய சாமி மாணவி தாரணியை நேரில் அழைத்து பாராட்டிய தோடு நிதியுதவி அளிப்பதா கவும் உறுதியளித்தார். தமிழக இளைஞர் நலன்- விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலி னின்  கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும்  மாணவி மென்மேலும் அறிவியல் துறையில் மேம்பட வேண்டு மென்று அமைச்சர் வாழ்த்தி னார்.