மதுரை, அக்.2- மதுரை மாவட்டம் அழகர்கோவிலின் வெளிப்பிரகா ரத்தில் உள்ள மடப்பள்ளியின் அருகேயுள்ள சாமி படங்கள் மற்றும் கோவில் காலண்டர்கள் வைக்கப்பட்டி ருந்த அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் சாமி படங்கள், காலண்டர்கள், புத்தகங்கள் மற்றும் கோவிலுக்கு சொந்தமான மரப்பொருட்களும் தீயில் கருகி சேதமாகின. தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். வணிகவரி-பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மற்றும் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் தீவிபத்து பகுதிகளை பார்வையிட்டு, அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுவதால், அது குறித்தும் விசாரணை நடத்திவருகின்றனர்.