districts

img

ஆத்தூர் அருகே கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

சின்னாளப்பட்டி, ஆக.4- திண்டுக்கல் மாவட்டம் ஆத் தூரை அடுத்த மல்லையாபுரம் பகுதியில் கடந்த ஐந்து வருடங்களு க்கு மேலாக திண்டுக்கல்லை சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான தனியார் கயிறு தயா ரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு தேங்காய் நார் கழிவுகள் குவிக்கப்பட்டு அதிலி ருந்து கயிறு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், வெள்ளியன்று காலையில் இந்த தொழிற்சா லையில் திடீரென ஏற்பட்ட தீ, தொழிற்சாலை முழுவதும் பரவி பற்றி எரிந்தது. இதில் விற்பனைக்கு தயாராக இருந்த கயிறு பண்டல் கள், தேங்காய் நார் கழிவுகள் மற்றும் கயிறு தயாரிக்க பயன்படுத்தக் கூடிய இரும்பு தளவாட இயந்தி ரங்கள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாகின.  தகவல் அறிந்து வந்த ஆத்தூர் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தினால் பல லட்சம் ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள் ளதாக கூறப்படுகிறது. இச்சம்ப வம் குறித்து செம்பட்டி காவல் துறையினர் விசாரித்து வரு கின்றனர்.