பெண்களை அவமரியாதையாக பேசும் ஓட்டுநர், நடத்துநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்த பேருந்துகளை சரி செய்ய வேண்டும். கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகள் உரிய நேரத்திற்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தி இராமநாதபுரத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட நகர்க்கிளை மேலாளர் உடனடியாக சரி செய்வதாக வாக்குறுதி அளித்தார் .மாவட்டத் தலைவர் கே மாலதி, மாவட்டச் செயலாளர் இ கண்ணகி, மாவட்ட குழு உறுப்பினர்கள் குருவம்மாள், சாந்தி ஆகியோர் இந்த மனுவை அளித்தனர்.