districts

மதுரை முக்கிய செய்திகள்

வரதட்சணை கொடுமை  ஆசிரியர் மீது வழக்கு பதிவு 

தேனி, மார்ச் 11- கூடுதல் நகை கேட்டு வரதட்சணை கொடுமை செய்த தாக ஆசிரியர் உள்ளிட்ட  5பேர் மீது போடி அனைத்து மக ளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம், சின்னமனூரை சேர்ந்தவர் வெள்  ளைப்பாண்டியன். இவர் மதுரையில் உள்ள தனியார்  பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவ ருக்கும், திருப்பூர் மாவட்டம் பூச்சக்காடு கருவம்பாளை யத்தை சேர்ந்த பிரியா(27) என்பவருக்கும் கடந்த ஆண்டு  திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கணவர் வெள்ளைப்பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினர், பிரியாவிடம் பேசாமல் இருந்து வந்ததாகவும், நகையை யும் வாங்கி வைத்துக் கொண்டதாகவும் போடி அனைத்து  மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் தன்னிடம் கூடுதலாக நகைகள் வரதட்சணையாக வாங்கி  வருமாறு கேட்டு அடித்து துன்புறுத்தியாக அதில்  குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து நீதிமன்ற  உத்தரவுப்படி போடி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். வர தட்சணை கேட்டு துன்புறுத்திய வெள்ளைப்பாண்டியன் அவரது தந்தை ரவி, தாய் பொம்மி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குடியிருப்பில்  பட்டாசு தயாரித்த இருவர் கைது

சிவகாசி, மார்ச் 12- சிவகாசி அருகே குடியிருப்பு பகுதியில் அனுமதி யின்றி பட்டாசு தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாரனேரி போலீசார்  குடிசை மாற்று வாரியம் எதிரே உள்ள குடியிருப்பு  பகுதி யில் சோதனையிட்டனர். அப்போது, அனுமதியின்றி ஒரே  குரோஸ் திரி, அட்டை குழாய்கள், திரி வைக்கப்பட்ட குழாய்கள், உதிரி வெடிகள் ஆகியவை இருப்பது கண்ட றியப்பட்டது. இதையடுத்து, பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீ சார், அதை தயார் செய்த பாலமுருகன்(23), முத்துமாரி (29) ஆகியோரை கைது செய்தனர்.

சின்னமனூர் அருகே அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு

தேனி, மார்ச் 12- சின்னமனூர் அருகே அய்யம்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு திருவிழாவில் காளைகளை அடக்கிய வீரர்களும் ,அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளர்களும் பரிசுகளை தட்டி சென்றனர் .ஜல்லிக்கட்டில்  620  காளைகளும், 326 மாடு பிடி வீரர்களும்  கலந்து கொண்டனர்.  தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே அய்யம்பட்டி கிராமத்தில் உள்ள  ஏழைகாத்த அம்மன்,  வல்லடிகாரசுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 12 ஞாயிறன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது .இதற்காக தேனி, மதுரை, திண்டுக்கல் சிவகங்கை, இராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார்  600க்கும் மேற்பட்ட காளைகள், 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.  போட்டியை பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார், திமுக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.  வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வெளியேறிய காளைகளை, களத்தில் உள்ள வீரர்கள் மல்லுக்கட்டி அடக்கினர். ஜல்லிக்கட்டு போட்டிக்காக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே தலைமையில் சுமார் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  20 காளைகளை அடக்கிய  கார்த்திக் என்பவர்   முதல் பரிசாக இருசக்கர வாகனத்தை பெற்றார் .18 மாடுகளைப் பிடித்து இரண்டாம் இடத்தை சாரதி என்பவர் பிடித்து பைக்கினை பரிசாக பெற்றார்.ஆண்டிச்சாமி என்பவரது காளை  சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.  இதில் கூடலூர் வடக்கு காவல்நிலைய காவலர் அழகர்சாமி , அய்யம்பட்டி சேர்ந்த அமர்,ஆண்டிபட்டி கரட்டுப்பட்டியை சேர்ந்த பரமசிவம் (50), மதுரை சேர்ந்த அன்புசெல்வம் (20)  ஆகியோருக்கு  மாடு முட்டியதில் படுகாயமடைந்தனர். அவர்களை முதலுதவி சிகிச்சைக்கு பின் தேனி  அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.மாடுபிடி வீரர்கள், பார் வையாளர்கள் உட்பட 60 பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது.

சு.வெங்கடேசன் எம்.பி.நிதியில்  நூலக கட்டிடம் அடிக்கல் 

மதுரை, மார்ச் 12-  மதுரை மாநகராட்சி நெல்பேட்டை 49 ஆவது வார்டில்  மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில்  நூலகம் கட்ட அடிக்கல்  நாட்டு நிகழ்ச்சி  ஞாயிறன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தெற்கு மண்டல தலைவர் முகேஷ் சர்மா ,மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு பகுதிக்  குழு செயலாளர்  செயலாளர் ஜெ. லெனின் திமுக நெல்பேட்டை பகுதி செயலாளர் அன்வர் உசேன், 49  ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் அபுதாஹிர், சிபிஎம்  பகுதிக்குழு உறுப்பினர் எகியா திமுக வட்டச் செயலாளர் பிஸ்மி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

புதிய நிர்வாகிகள் தேர்வு

சிவகங்கை, மார்ச் 12- தமிழ் நாடு அரசு பொதுப்பணித்துறை கணக்கு மற்றும்  ஆட்சி பணியாளர் சங்கத்தின் மாவட்ட பேரவைக்  சிவ கங்கையில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்டத்  தலைவராக கோடைமலைகுமரன்,மாவட்ட செயலாள ராக குணசேகரன், மாவட்ட பொருளாளராக சரத்குமார் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்  தில் அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் ஆ. செல்வம், மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகி யோர் பேசினர். 

காலமானார்

திண்டுக்கல், மார்ச் 12- திண்டுக்கல் அருகே ரெட்டியபட்டி ஜெய்நகரில் ரெ.தன லட்சுமி (85) என்பவர் காலமானார். இவர் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும் சிந்துசம வெளி ஆய்வாளருமான ஆர்.பாலகிருஷ்ணனின் தாயார்  ஆவார்.   அவரது மறைவுச் செய்தியறிந்து தமிழ்நாடு முற்  போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டச்செயலாளர் கவிவாணன்,  மாவட்ட துணைத் தலைவர் வைத்தியலிங்கபூபதி. மாவட்டப்பொருளாளர் தாமோதரன்,  பாடகர் பழனி,  கவி.இலமு,  சிபிஎம் திண்டுக்  கல் மாமன்ற உறுப்பினர் கே.எஸ்.கணேசன்,  மற்றும் தமிழ் ஆர்வலர்கள்,  அரசு அதிகாரிகள் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

அதிக லாபம் தருவதாகக்கூறி  இணையவழியில் ரூ.22 லட்சம் மோசடி 

மதுரை, மார்ச் 12-  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே  அம்பலக்  காரன் பட்டியைச் சேர்ந்தவர் தினேஷ்(30). பட்டதாரியான  இவருக்கு முகநூல் மூலம் இணைய வழி தொழில் நிறு வனத்தில் இருந்து தொடர்பு கொள்வதாகக் கூறியுள்ள னர். மேலும் இணைய வழி தொழிலில் முதலீடு செய்தால்  குறுகிய காலத்தில் அதிக லாபம் என்றும் கூறி ஆசை காட்டியுள்ளனர்.  இதன்படி அவர்களுக்கு பல்வேறு தவணைகளில் ரூ.22.47 லட்சத்தை தினேஷ் அனுப்பியுள்ளார். ஆனால்  பல மாதங்கள் ஆகியும் லாபம் எதுவும் கிடைக்கவில்லை.  இதையடுத்து அந்நிறுவனத்தை தொடர்புகொண்டு கேட்ட போது, மீண்டும் குறிப்பிட்ட தொகை அனுப்பினால்தான் லாபம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை யடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தினேஷ் இது தொடர்பாக மதுரை ஊரகக்காவல்துறையின் இணை யக்குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்  துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

கர்ப்பிணிப் பெண்  தூக்கிட்டு தற்கொலை  

மதுரை, மார்ச் 12-  மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள தேனூர்  பழைய காலனியைச் சேர்ந்த  ராமு - வனிதா தம்பதி யினர் மகள் உதயா(21).   மதுரை பைபாஸ் சாலை சத்திய மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் பிரித்வி ராஜ். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் காதலித்து கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டனர். கடந்த மாதம் உதயா கர்ப்பமான நிலையில்,  தனது கணவருடன் மதுரை  பைபாஸ் சாலை சத்தியமூர்த்தி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். கணவர் பிரித்விராஜ் தனி யார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில் சனிக்கிழமை வழக்கம்போல பணிக்குச் சென்று விட்டார்.  இந்நிலையில் இரவு வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படா ததால் பக்கத்து வீட்டினர் கதவைத் தட்டியுள்ளனர். ஆனால்  கதவு திறக்கப்படாததால் அவர்கள் காவல்துறையின ருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் காவல்துறை யினர் சம்பவ இடத்துக்கு வந்து  கதவை உடைத்து உள்ளே  சென்றபோது, வீட்டின் அறையில் உதயா தூக்குப்போட்டு  தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.  சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். மேலும் சம்பவம் தொடர்பாக உதயாவின் தாயார் வனிதா(40) அளித்தப் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அனல் மின் நிலையத்தில் திடீர் பழுது 

தூத்துக்குடி, மார்ச் 12- தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் திடீர் பழுது  ஏற்பட்டதால் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது.இதனால் மூன்று அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 

அவதிப்பட்ட நோயாளிகளை வெளியேற்றிய விவகாரம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் உள்பட 4 பேர் இடமாற்றம்

போதுமான ஊழியர்களை நியமிக்க கோரிக்கை

மதுரை, மார். 12-  மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சர்க்கரை நோயால் கால் அழுகிய நிலையில் இருந்த நோயாளியை வெளியேற்றிய விவ காரத்தில் இரு பயிற்சி மருத்துவர்கள் உள்பட 4 பேர் இடமாற்றப்பட்டு நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது.    மதுரை நகர் மற்றும் ஊரகப்பகுதிகளில், வீட்டை விட்டு வெளியேறிய முதியோர், மன நலம் குன்றியோர், சாலை விபத்துகளில் காய மடைந்து நடமாட முடியாத நிலையில் உள்ள ஆதரவற்றோர்களை காவல்துறையினர், தொண்டு நிறுவனங்கள் மீட்டு அரசு ராஜாஜி  மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கின்றனர். மருத்துவமனையில் உள்  நோயாளிகளாக அனுமதிக்கப்படும் இந்த  நோயாளிகள், ஓரிரு நாள்களில்  அரசு மருத்து வமனையைச் சுற்றியுள்ள சாலைகளில் படுத்த படுக்கையாக கிடக்கின்றனர். சில நாள்க ளில் இறந்தும் விடுகின்றனர். பின்னர் அடை யாளம் தெரியாத சடலமாக கருதப்பட்டு அடக் கம் செய்யப்பட்டு விடுகிறது. இதுபோன்ற நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேகொண்டு வந்து  சாலையில் அல்லது மருத்துவமனை வளா கத்தில் விட்டுச்செல்வதாக புகார் எழுந்தது.  இந்நிலையில் ஒரு மாதத்துக்கு முன்பு சர்க்கரை நோயால் காலில் புண்  ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆத ரவற்ற  நோயாளி ஒருவர்  வியாழக்கிழமை மருத்துவமனைனையில் இருந்து வெளி யேற்றப்பட்டு பிரேதப்பரிசோதனைக்கூடம் அருகே கிடத்தப்பட்டிருந்தார். செஞ்சிலுவைச் சங்கத்தினர் அவரை மீட்டு மீண்டும் மருத்து வமனையில் சேர்த்தனர். ஆனால் மறுநாள் காலையில் அவரை ஊழியர்கள் மீண்டும் வெளியேற்றி விட்டனர்.  இதுதொடர்பாக அரசு மருத்துவமனை முதன்மையர் ஏ.ரத்தினவேலுவின் கவ னத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.பின்னர் நோயாளி மீண்டும் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார்.  இந்நிலையில் கால் அழுகிய நிலையில் இருந்த  நோயாளிக்கு சிகிச்சை அளிக்காமல் அவரை வெளியேற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தி மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய முதன்மையர் ஏ.ரத்தின வேலு, நோயாளிக்கு சிகிச்சை அளிக்காமல் பணியின் போது அலட்சியமாக இருந்த தாக 2 பயிற்சி மருத்துவர்கள் மற்றும் செவிலி யர், மருத்துவமனை ஊழியர் ஆகிய நால்வ ரையும்,  அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து பாலரெங்காபுரத்தில் இயங்கி வரும் அரசு மருத்துவமனைக்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார். மேலும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் நோயாளி களுக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியம் காட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  இதுகுறித்து ஊழியர்கள் சிலர் கூறு கையில், சிகிச்சைக்கு வரும்  நோயாளிகளுக்கு  உதவியாளர் இல்லை என்பது மிகப்பெரும் குறையாக உள்ளது. மருத்துவத்துறையில் ஏற்கெனவே  ஊழியர் பற்றாக்குறை உள்ளது. ஆதரவற்ற நோயாளிகளுக்கென மருத்து வத்துறை நிர்வாகம் அல்லது அரசு தனியாக ஊழியர்களை நியமிக்க வேண்டும். அங்கே யே பணியாற்றும் ஊழியர்கள் இது போன்ற பணிகளில் ஈடுபட முடியாது. ஏனென்றால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் உள்ள மருத்துவமனையில் சரியான நேரத்தில் மருந்து மாத்திரை கொடுக்க அல்லது ஒரு  சில மருத்துவப்பரிசோதனைக்கு கூடவே செல்ல முடியும். பக்கத்திலிருந்து அவர்களை  பராமரிக்க முடியாது.

எனவே   அதற்காக தனி ஊழியர்களை நியமிக்க வேண்டும். இன்றைக்கு ஊழியர்களுக்கான பணிச்சுமை அதிகரித்து வருகிறது. இதையும்  மருத்து வத் துறை நிர்வாகம் கணக்கில் கொண்டு போதுமான ஊழியர்களை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நியமித்தால் இது போன்ற தவறுகள் நடைபெறுவதை தவிர்க்கலாம் என்று தெரிவித்தனர்.  இதுதொடர்பாக மருத்துவமனை முதன்மையர் ஏ.ரத்தினவேலுவிடம் கேட்டபோது, கால் அழுகிய நிலையில் நோயாளி கடந்த ஒரு மாதமாக அரசு மருத்து வமனையில் சிகிச்சையில் இருந்தார். அவ்வப்போது அவராகவே மருத்துவமனை யில் இருந்து வெளியேறி விடுவதாக ஊழி யர்கள் கூறுகின்றனர். மேலும் தன்னை வெளியே விட்டு விடுமாறு ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டதால்  அவரை வெளியே விட்டுள்ளனர். தற்போது மீண்டும் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற ஆத ரவற்ற நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த பின்னர் அவர்களை பராமரிப்பதற்காக இரு தொண்டு நிறுவனங்களுடன், அரசு மருத்துவமனை நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் கப்பலூரில் அரசு  மருத்துவமனையும் தனியாக ஒரு ஆத ரவற்றோர் இல்லத்தையும் நடத்தி வரு கிறது. கடந்த 9 மாதங்களில் 90-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, ஆதரவற்றோர் இல்லங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.