பேன்சி ரக பட்டாசு தயாரித்த இருவர் மீது வழக்கு
சிவகாசி, டிச.18- சிவகாசி, வெம்பக்கோட்டை பகுதிகளில் அனுமதி யின்றி பட்டாசு தயாரித்த இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சிவகாசி கிழக்கு காவல்துறையினர் முருகன் கால னிப் பகுதியில் ரோந்து சென்ற போது, அய்யாச்சாமி(47) என்பவர் அனுமதியின்றி பேன்சிரக பட்டாசு குழாய்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. எனவே, அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அய்யாச்சாமி மீது வழக்குப் பதிவு செய்தனர். இதேபோல் வெம்பக்கோட்டை போலீசார் ரோந்து சென்ற போது, வெற்றிலையூரணி அண்ணா காலனியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் அனுமதியின்றி பட்டாசு தயா ரித்து பதுக்கி வைத்தது தெரிய வந்தது. எனவே, அவற்றை பறிமுதல் செய்த போலீசார் ராஜ்குமார் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
சாத்தூர் அருகே கார் மோதியதில் 21 ஆடுகள் பலி
சாத்தூர், டிச.18- விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள செவல் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்கம் என்பவரது மகன் பாண்டி முருகன் (23). இவர் ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். மேலும், இவர் அவ்வப்போது பல்வேறு விளை நிலங்களில் கிடை அமைத்து வருவது வழக்கம். இந்நிலையில் சாத்தூர் அருகே உள்ள சின்னக்கா மன்பட்டி பகுதியில் கிடை அமைத்துள்ளார். சனிக்கிழமை யன்று இரவு , காட்டுப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற சில ஆடுகள் திரும்ப வரவில்லையாம். எனவே, பாண்டி முரு கன் ஆடுகளைத் தேடிச் சென்றுள்ளார். பின்னர் காணா மல் போன ஆடுகளை கண்டு பிடித்து மீண்டும் கிடை போட்ட இடத்திற்கு அழைத்து வந்துள்ளார். சின்னக்காமன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சாத்தூர்-சிவகாசி சாலையை ஆடுகள் கடந்து சென்று கொண்டிருந்ததாம். அப்போது அவ்வழியாக அதிவேக மாக வந்த கார் ஒன்று ஆடுகள் மீது மோதியது. இதில் ஏராளமான ஆடுகள் தூக்கி வீசப்பட்டன. இத னால் பலத்த காயம் அடைந்த 21 ஆடுகள் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தன. தகவல் அறிந்து விரைந்து வந்த சாத் தூர் நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். காரை ஓட்டிய சிவகாசி தேவர்குளம் பகுதியைச் சேர்ந்த அனந்தன் (43) என்பவரை கைது செய்து விசாரித்ததில், அவர் மது போதையில் காரை ஓட்டி வந்தது தெரிய வந்தது.
டிச.20 கோட்ட அளவில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
விருதுநகர், டிச.18- விருதுநகர் மாவட்டம் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்க ளில் டிசம்பர் 20 அன்று காலை 11 மணிக்கு கோட்ட அளவி லான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டம் சம்மந்தப்பட்ட கோட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு, விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கை களை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகரில் ஒரே நாளில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு மக்கள் வழங்கிய ரூ.3.78 லட்சம்
மதுரை, டிச. 18- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரை மாநகரில் டிசம்பர் 18 ஞாயிறன்று ஒரே நாளில் 3 லட்சத்து 78 ஆயிரத்து 800 ரூபாய் வெகுஜன நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது. கட்சி உறுப்பினர்கள் பகுதிக்குழு வாரியாக பொதுமக்களிடம் கட்சி வளர்ச்சி நிதி வசூலில் ஈடு பட்டனர். இதில் மாவட்டந் செயலாளர் மா. கணே சன், மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜய ராஜன் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள், பகுதிக்குழு செயலாளர்னய், மாவட்ட குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர் மற்றும் கட்சிக்கிளை உறுப்பினர்கள் ஞாயி றன்று வீடு வீடாகச் சென்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கான நிதியினை மக்களிடம் திரட்டினர். மேற்கு பகுதிக்குழு - 2 ரூ. 1 லட்சம் ஒரே நாளில் வசூல் செய்துள்ளது. மேற்கு பகுதி - 1 ரூ. 50 ஆயிரம், மத்திய பகுதி - 1 ரூ. 35 ஆயிரம், மத்திய பகுதி- 2 ரூ. 45 ஆயிரம், வடக்கு - 1 ரூ. 47 ஆயிரத்து 800. வடக்கு - 2 ரூ. 51 ஆயிரம், தெற்குப்பகுதி ரூ. 50 ஆயிரம் என்று ஒரே நாளில் 3 லட்சத்து 78 ஆயிரத்து 800 ரூபாயை மதுரை மாநகர் பொதுமக்கள் கட்சி வளர்ச்சி நிதியாக வழங்கினர்.
தேர்வு அட்டவணையால் தேர்வர்கள் ஏமாற்றம்: புதிய அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட கோரிக்கை
பழனி, டிச.18- பழனி ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வா ணையம் இரண்டு நாட்களுக்கு முன் 2022,2023 ஆம் ஆண்டிற்கான தேர்வுக் கான அட்டவணையை வெளியிட்டுள் ளது. இந்த அட்டவணை அவசர அவசர மாக வெளியிட்டுள்ளதாகவே தெரி கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அப்போதைய தலைவராக இருந்த காவல் துறை அதி காரி நடராஜ் காலத்தில் டிஎன்பிஎஸ்சி- யில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரபட்டு ஆண்டு அட்டவணை வெளி யிடப்பட்டு வருகிறது, யுபிஎஸ்சி இது போல் ஆண்டுஅட்டவணை வெளியிடு வது வழக்கம். ஆனால் டிஎன்பிஎஸ்சி வெளியிடும் அட்டவணை மாணவர்கள் மனநிலை, காலிபணியிடங்களுக்கு ஏற்றபடி அமைவதாக இல்லை. அதனால் டிஎன் பிஎஸ்சி வெளியிடும் அட்டவணை பெரிய ஏமாற்றத்தையும் அதிருப்தியை யும் ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட ஆண்டு தேர்வு அட்டவணை மிகுந்த ஏமாற் றத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ள தாக போட்டித்தேர்வர்கள் தெரி விக்கின்றனர். இதை அரசும் தேர்வாணையமும் அரசியலாக பார்க்காமல் முறைபடி காலியிடங்களின் எண்ணிக்கையை பெற்று கால தாமதம் ஆனாலும் தெள் ளத்தெளிவாக யுபிஎஸ்சி போல் ஆண்டு தேர்வு அட்டவணை வெளியிட முன் வர வேண்டும். தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகள் பல லட்சம் பேர் உள்ளனர்.போட்டித்தேர்வு களுக்கு இரவு பகல் பாராமல் தயாராகி வருகின்றனர்.
ஆனால் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆண்டு தேர்வுக்கான அட்டவணை தேர்வர்கள் மத்தியில் எதிர்மறை எண்ணத்தை ஏற்படுத்தி யுள்ளது.யுபிஎஸ்சி ஒரு அட்டவணை வெளியிட்டால் அந்த ஒரு வருடத்தில் அந்த தேர்வின் அனைத்து விதமான செயல்பாடுகள் நிறைவடைந்து பணி நியமனம் பெற்றுவிடுவர். ஆனால் டிஎன்பிஎஸ்சி வெளியிடும் அறிவிக்கையில் ஒரு தேர்வு அறிவிப்பு மற்றும் பணிநியமனம் பெற குறைந்தது 2 ஆண்டுகள் உறுதி. எனவே டிஎன்பி எஸ்சியானது யுபிஎஸ்சி போல ஆண்டுத்தேர்வுக்கான அட்டவணை வெளியிட வேண்டும். தமிழக தேர்வர் கள் பெரும்பாலும் எதிர்பார்ப்பது குரூப்2,4 நியமனங்களையே. ஆனால் சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட ஆண்டுத்தேர்வு அறி விப்பில் எதிர்பார்க்கும் படி எதுவும் இல்லாததால் போட்டித்தேர்வகள் மிகுந்த ஏமாற்றமும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். எனவே டிஎன்பிஎஸ்சி. யுபிஎஸ்சி போல ஆண்டு அட்டவணை வெளியிட முன் வர வேண்டும். தேர்வர்கள் நிலை யை கருத்தில் கொண்டு அவசரமின்றி புதிய அட்டவணையை வெளியிட தேர் வாணையம் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.