districts

img

ஒட்டன்சத்திரம் அருகே சாலையோரம் உடைந்து தொங்கும் மின்கம்பம்

ஒட்டன்சத்திரம், ஆக.18-  ஒட்டன்சத்திரம் அருகே சாலையோரம் மின்சார கம்பம் இரண்டாக உடைந்து தொங்குவதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள் ளது.இதனால்  பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து செல்கி றார்கள். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா கள்ளி மந்தையம் அருகே உள்ள கூத்தம்பூண்டி ஊராட்சி கரு மாங்கிணறு கிராமத்தின் வழியாக திருப்பூர் மாவட்டம் மூலனூருக்கு ஒட்டன்சத்திரம், பழனியில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள்  இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த வழியாக 20க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி வாகனங்களும் சென்று வருகின்றன. இச்சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும் என்பது குறிப்பி டத்தக்கதாகும். முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலையில் கருமாங்கிணறு கிராமத்தை அடுத்து சாலையோரம் உள்ள மின்சார கம்பத்தில் சில நாட்களுக்கு முன்பு ஏதே வாகனம் மோதியதில் மின்சார கம்பம் இரண்டாக உடைந்து தொங்கிக்கொண்டிருக்கிறது. எந்த நேரத்தில் கீழே விழுந்து பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் உயிர் பயத்தோடு இச்சாலையை பொதுமக்கள் கடந்து செல்கிறார்கள். கள்ளிமந்தையம் மின்சார வாரியம் உதவி பொறியா ளர் அலுவலக அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு உடைந்து தொங்கும் மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.