விருதுநகர், ஆக.21- விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுக்க மாற்றுத் திறனா ளித் தாய்க்கு உதவியாகத் தனது கை உடைந்த நிலை யில் சிறுவன் ஒருவர் வந்தி ருந்தார். அச்சிறுவனை 198 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச் சைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத் தார் மாவட்ட ஆட்சியர். சாத்தூர் அருகே உள்ள பெரிய கொல்லபட்டி கிரா மத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. மாற்றுத்திற னாளியான இவர், தனக்கு ஏதாவது வேலை வேண்டு மெனத் திங்களன்று விருது நகர் ஆட்சியர் ஜெயசீலனி டம் கோரிக்கை மனு அளித் தார். அப்போது, அவர் தனது மகன் விஷ்வா(5)- வை உதவிக்கு அழைத்து வந்தி ருந்தார். அச்சிறுவனின் கை யில் கட்டுப் போடப்பட்டி ருந்தது. இதைப்பார்த்த ஆட்சியர் ஜெயசீலன், கையில் என்ன கட்டு எனக் கேட்டுள்ளார். அதற்குச் சிறு வனின் தாயார், பள்ளியில் விளையாடும் போது கீழே விழுந்ததில் கை எலும்பு உடைந்து விட்டது. எனவே, முட்டையைப் பயன்படுத்திக் கட்டுப் போட்டுள்ளோம் எனப் பதிலளித்தார். இதைக் கேட்ட ஆட்சியர், மருத்துவமனைக்குச் சென்று நல்லமுறையில் சிகிச்சை பெற வேண்டும் எனத் தெரிவித்ததோடு, உட னடியாக, 108 ஆம்பு லன்சுக்கு தகவல் தெரி வித்தார். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அச்சிறுவன் மற்றும் தாயாரை விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.