districts

img

திடீர் மழையால் நிலக்கோட்டை அருகே 100 ஆண்டுகால ஆலமரம் விழுந்தது

சின்னாளபட்டி,டிச. 31- திண்டுக்கல் மாவட்டம் நிலக் ்கோட்டை பகுதியில் வியாழ னன்று பலத்தக் காற்றுடன் பரவ லான மழை பெய்தது. அப்போது, நிலக்கோட்டை அருகே அவையம்பட்டி பிரிவு என்ற இடத் தில் செம்பட்டி - நிலக்கோட்டை முக்கிய சாலையின் குறுக்கே நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமையான ஆலமரம்  திடீரென சாலையின் குறுக்கே விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தா கரிகாலபாண்டியன், நிலக்கோட்டை தீயணைப்புத் துறை அதிகாரிகள், நிலக் கோட்டை காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை  அதிகாரி கள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர், சாலையின் குறுக்கே இருந்த ஆலமரத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர்.  ஆலமரம் சாலையின் குறுக்கே  விழும்போது வாக னங்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் செல்லாமல் இருந்த தால், பெரும் விபத்து  தவிர்க்கப் ்பட்டது.