districts

மதுரை மாவட்டத்தில் 91.79 சதவீதம் தேர்ச்சி

மதுரை, மே. 19-  மதுரை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாண வர்கள் 38 ஆயிரத்து 63 பேர்  பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதினர். இதில் மாணவிகள் 18,873, மாணவர்கள் 19,190 பேர் எழுதினர். இதில் மாணவிகள் 17,957 பேரும் மாணவர்கள் 16,982 பேர் என்று மொத்தம் 34, 939 பேர் தேர்ச்சி பெற்றுள் ளனர் இது மாவட்டத்தில்  91.79 சதவீத தேர்ச்சியாகும் அதேபோல் மதுரை மாநக ராட்சி பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 1991 பேர் தேர்வு எழுதியதில் 1679 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் மாந கராட்சி பள்ளிகளில் 84.18 சதவீதம் மாணவ - மாணவி ள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டு மாநக ராட்சி  பள்ளி தேர்ச்சி சத வீதத்தை ஒப்பிடுகையில் 9.15 சதவீதம் தேர்ச்சி  குறைந்துள்ளது. 11ஆம் வகுப்பு பொ துத்தேர்வு மதுரை மாவட் டத்தில் மொத்தம் 34, 644 மாணவர்கள் எழுதினர். இதில் மாணவர்கள் 14,584 பேரும் மாணவிகள் 16, 989 பேர் தேர்ச்சி பெற்றுள் ளார்கள் மொத்தம் 91.14 சத வீதம் தேர்ச்சி ஆகம் இதில் மாநகராட்சி பள்ளி சேர்ந்த  மாணவர்கள் 542,  மாணவி கள் 1805 பேர் என்று மொத்தம் 2147 மாணவர்கள் தேர்வு  எழுதினர். இதில் மாணவர் கள் 365 பேரும், மாணவிகள் 1403 பேர் என்று மொத்தம் ஆயிரத்து 1768 மாநகராட்சி பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் இது தேர்ச்சி சதவீதத்தில் 82.35 சதவீதம் ஆகும். மதுரை மத்திய சிறை யில் 10ம் வகுப்பு பொ துத்தேர்வு எழுதிய சிறைவா சிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்தனர். மதுரை மத்திய சிறை யில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 23 ஆண்கள், ஒரு பெண்   உள்பட 24 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் சிறைவாசி அறி வழகன் என்பவர் 363 மதிப் பெண்களும்,  சிறைவாசி உதயகுமார் என்பவர் 360  மதிப்பெண்களும் பெற்றுள் ளனர் என்பது குறிப்பி டத்தக்கது. இதேபோல் மதுரை மத்திய சிறையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 15 பேரில் 14 பேர் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.