சபரிமலை, ஏப்.17- சபரிமலை தொடர்பான வளர்ச்சிப் பணிகளுக்கு கிப்பி ரூ.75 கோடி அனுமதி அளித்துள்ள தாக தேவசம் தலைவர் கே அனந்த கோபன் கூறினார். இது சபரி மலை மற்றும் அதைச் சார்ந்த கோவில்களின் வளர்ச்சிக்கு பயன்ப டுத்தப்படும். எருமேலி மற்றும் நிலக்கல் ஆகிய இடங்களில் பயணி யர் நிலைய வளாகம் கட்டப்படும். இந்த வளாகம் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யும் வகையில் கட்டப்படும். தங்குமி டம், விருந்தினர் மாளிகை, உணவு கூடம் உள்ளிட்ட விரிவான வசதி கள் ஏற்படுத்தப்படும். நிலக்கல் வளாகத்திற்கு ரூ.39 கோடியும், எருமேலி வளாகத்திற்கு ரூ.14.75 கோடியும் ஒதுக்கப்பட்டுள் ளது. இரு இடங்களுக்குமான பணி கள் ஏப்.18ம் தேதி திங்களன்று நடக்கிறது. எருமேலியில் காலை 10 மணிக்கும், நிலக்கல்லில் பகல் 12 மணிக்கும் அடிக்கல் நாட்டப்படும். கட்டுமானப் பணிகள் குறித்த நேரத்தில் முடிக்கப்படும். இது தவிர சன்னிதானத்தில் உள்ள பல்வேறு கட்டிட வளாகங்கள் புதுப்பிக்கப்ப டும். இதற்காக பல்வேறு நிறுவ னங்கள் முன் வந்துள்ளன. முதற் கட்டமாக ரூ.30 கோடி மதிப்பில் சீரமைப்புப் பணிகள் நடை பெற்று வருகின்றன. புனரமைப்பும் பழுது நீக்கமும் நன்கொடையா ளர்கள் உதவியுடன் நடக்கும். கட்டு மானத்தை மேற்பார்வையிடு வதற்கு வாரியம் மட்டுமே பொறுப் பாகும். முதற்கட்டமாக சபரி, தேஜஸ் வனி, சின்முத்ரா கட்டிடங்கள் புதுப்பிக்கப்படும். மீதமுள்ளவை விரைவில் முடிக்கப்படும். சன்னி தானத்தில் உள்ள அனைத்து கட்டி டங்களின் மேல் சோலார் பேனல்கள் பொருத்தவும் முடிவு செய்யப்பட் டது. இதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும். இதற்கான மதிப்பீடு ரூ.15 கோடி. சீசன் இல்லாத காலங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மாநில மின்சார வாரியத்திற்கு விற்கப்படும். கொச்சியில் உள்ள சியாலின் தொழில்நுட்ப ஆலோச னையில் இப்பணி நடைபெறும். அரவணா தயாரிப்பு ஆலையும் மேம்படுத்தப்படும். இதற்கான பணி கள் விரைவில் தொடங்கும் என்றார் ஆனந்த கோபன்.