உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர் மாவீரன் ஜோசப் ஸ்டாலின் அவர்களின் 69 ஆவது நினைவு தின நிகழ்ச்சி மார்ச் 8 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்றது. மதுரை மாநகர் மேற்கு-1 சம்மட்டிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கிளைச் செயலாளர் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் மா.கணேசனிடம் 15 தீக்கதிர் நாளிதழ் சந்தாக்களின் தொகையை பகுதிக்குழு உறுப்பினர் பி. வீரமணி வழங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜா. நரசிம்மன், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.