இராமநாதபுரம், ஆக 7- ஊரக வளர்ச்சி உள் ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தினர் ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலி யுறுத்தி மதுரை, தேனி, இராமநாதபுரம், சிவகங்கை யில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கிராம ஊராட்சியின் பணியாற்றும் ஓ.எச்.டி ஆப்ரேட்டர்களுக்கு மாத ஊதியம் 11,050 வழங்க வேண்டும். அவர்களுக்குக் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தூய்மைப் பணி யாளர்களுக்கு ரூ 10,036 வழங்க வேண்டும்.தூய்மை காவலர்களுக்கு மாத ஊழி யம் ரூ 10 ஆயிரம் வழங்க வேண்டும். கிராம ஊராட்சி யில் பணியாற்றும் போது உயிரிழக்கும் ஊழியர்க ளுக்கு ரூ 5 லட்சம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டது.
மதுரை மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் மாவட்டப் பொதுச்செய லாளர் பொன்.கிருஷ்ணன், மாவட்டத் தலைவர் கே. தங்கவேல்பாண்டியன், பொருளாளர் பி.இராஜன், சிஐடியு மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் செ. கண்ணன், மாவட்டச் செய லாளர் கே.அரவிந்தன், செ. ஆஞ்சி, எம்.சேதுராமு, எம். ஆண்டவர், வி.பிச்சை ராஜன், எம்.சௌந்தர், பி. பொன்ராஜ், எஸ்.பி.மண வாளன், நல்.மூர்த்தி உட்பட 600 பேர் பங்கேற்றனர் தேனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உள்ளாட்சி ஊழியர் சங்க தேனி மாவட் டத் தலைவர் பி.ஜெயன், மாவட்டச் செயலாளர் டி. ஜெயபாண்டி, என். மதுரை முத்து, எம்.குருசாமி, எஸ். பொம்மயன், எஸ்.பழனி சாமி, பால்பாண்டி.. பி.ஈஸ்வ ரன், டி.ஹரி கிருஷ்ணன், ஆர்.மகேந்திரன், இ. பாண்டி, எம்.ராஜா, மாரி சாமி, பெரிய கருப்பன், உட் பட ஏராளமானோர் பங்கேற்ற னர். இராமநாதபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் மாவட்டத் தலைவர் எஸ். பிரான்சிஸ், சிஐடியு மாவட்டத்தலைவர் எஸ்.ஏ. சந்தானம், சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி, எம். அய்யத்துரை, ஆர்.வாசு தேவன் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சிவகங்கை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் சிஐடியு மாவட்டத் தலை வர் வீரையா, மாவட்டச் செய லாளர் சேதுராமன், பொதுச் செயலாளர் முருகானந்தம், மாவட்டத் துணைத் தலை வர் உமாநாத், பொதுத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் வேங்கையா, செய்யது முகம்மது, அண்ணாதுரை, ரமேஷ், வெள்ளைச்சாமி, ஜெயக் குமார், தங்கமணி,ஜெய ராமன் உட்பட ஏராளமா னோர் பங்கேற்றனர்.