விருதுநகர், மே 19- 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் 54 அரசு பள்ளிகளில் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் முழுமையாக தேர்ச்சி பெற்றுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள் 181, உதவி பெறும் பள்ளிகள் 94, மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகள் 78, நகராட்சி பள்ளிகள் 5 என மொத்தம் 358 பள்ளிகள் உள்ளன. இதில் 54 அரசு பள்ளிகள், 2 நகராட்சி பள்ளிகள் என மொத்தம் 146 பள்ளிகள் முழுமையான தேர்ச்சி பெற்றுள்ளன. 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ள அரசுப் பள்ளிகள் விபரம் வருமாறு : சிவகாசி ஏ.வி.டி. நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, எம்.புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, மம்சாபுரம், துலுக்கன்குறிச்சி, கீழக் கோட்டையூர், சிப்பிப்பாளை பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் அனுப்பங்குளம், அயன்கரி சல்குளம், அயன் கொல்லங்கொண்டான், திருத்தங்கல், துலுக்கபட்டி, மாரனேரி, ரிசர்வ்லைன் அரசு மேல்நிலைப் பள்ளிகள், அம்மாபட்டி, பாப்பநாயக்கன்பட்டி, புல்லக்கவுன்டன்பட்டி, எஸ்.அம்மா பட்டி, முத்தாண்டியாபுரம், ஆலமரத்துப் பட்டி, கே.செல்லையாபுரம், கோப்பைய நாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகள், டி.மானகசேரி, இராஜபாளையம் திருவள்ளுவர் நகர் மேல்நிலைப் பள்ளி, தொம்பக்குளம், கிளவிகுளம், பள்ளபட்டி மேல்நிலைப் பள்ளிகள், கிருஷ்ணன் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி, இருஞ்சிறை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சாத்தூர் என்.ஜி.ஓ.காலனி அரசு மேல்லைப் பள்ளி, கழுவனசேரி, மறவர் பெருங்குடி, பட்டம்புதூர், தெற்கூர் அரசு மேல்நிலைப் பள்ளிகள், வடமலைக்குறிச்சி, எஸ்.வல்லாள குளம், சந்திரபுளியங்குளம், கண்மாய் சூரங்குடி, குருந்தமடம், போத்திரெட்டிய பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகள், உலக்குடி, கம்பாளி, கத்தாளம்பட்டி, குல சேகரநல்லூர், குரண்டி, பாம்பாட்டி, பெரியகொல்லபட்டி, எஸ்.கல்லுபட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகள். சவ்வாசுபுரம், சிறுவனூர், தோட்டிலோ வன்பட்டி, வல்லப்பன்பட்டி அரசு மேல் நிலைப் பள்ளிகள், விடத்தகுளம், பனையூர், ஜோகில்பட்டி, கோவிலாங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளிகள் ஆகியவை 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.