சின்னாளபட்டி,அக்.23- வத்தலக்குண்டுவில் 50 உடல் மற்றும் உடல் உறுப்புகளை தானம் வழங்கினர். திண்டுக்கல் மாவட்டம், வத்த லக்குண்டு பசுமை வதிலை இயக்கம் சார்பாக நடந்த முகாம் துவக்க விழா வுக்கு திமுக ஒன்றிய செயலாளர் கே.பி.முருகன் தலைமை வகித்தார். வத்தலக்குண்டு பேரூராட்சி தலை வர் சிதம்பரம், துணைத் தலைவர் தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர், வதிலை பசுமை இயக்க தலைவர் மருதராசன் வர வேற்றார்.நிலக்கோட்டை டிஎஸ்பி முருகன் உடல் மற்றும் உடல் உறுப்பு தானம் செய்த 50 பேரின் மனுக்களை பெற்று மருத்துவத் துறையிடம் அளித்துப் பேசினார். மதுரை அரவிந்த் மருத்துவ மனை கண் வங்கி மேலாளர் சர வணன் கண்தான படிவங்களை பெற்றுக்கொண்டார். பட்டிமன்ற நடுவர் முல்லை நடவரசு சிறப்புரை யாற்றினார். திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருந்து கிடங்கு அலுவலர் சிவ குமார், ரோட்டரி சங்க துணை ஆளு நர் கிருஷ்ணமூர்த்தி உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர். முகா மில் உடல் மற்றும் உடல் உறுப்பு களை தானமாக வழங்கியவர் களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது. செல்வ பாண்டியன் நன்றி கூறி னார்.