தூத்துக்குடி, ஆக. 23- போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி க்கு 5 வருடங்கள் சிறை தண்ட னை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தூத்துக்குடி மாவட்டத் தில் கடந்த 2019ம் ஆண்டு 13 வயது மனநலம் பாதிக் கப்பட்ட சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு கங்கன்குளம் பகுதி யைச் சேர்ந்த கருப்பணன் மகன் ராஜகனி (70) என்ப வரை கோவில்பட்டி அனை த்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கை கோவில் பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி புலன் விசாரணை செய்து கடந்த 21.08.2019 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். இவ் வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ் வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் புதனன்று குற்றவாளியான ராஜகனி க்கு 5 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.