districts

மதுரை முக்கிய செய்திகள்

கோம்பையில் முன்விரோதத்தில்  வாலிபர் கொலை:  5 பேர் கைது

தேனி, மே 24- உத்தமபாளையம் அருகே கோம்பையில்  வாலிபர்  கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை  கைது செய்த  காவல்துறையினர் கொலைக்கான காரணம் குறித்து விசா ரணை நடத்தி வருகிறார்கள். தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள  கோம்பை பேரூராட்சியில் அரண்மனை தெருவில் வசிப்ப வர் சதீஷ்குமார் (வயது 28) என்ற இளைஞர். அந்தப் பகுதி யில் மதுப் போதைக்கு அடிமையாகி பல்வேறு குற்ற சம்ப வங்களில் ஈடுபட்டு வந்ததாகவும் அவர் மீது குற்ற வழக்கு கள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிகிறது. இவர் வழக்கம் போல் மது அருந்திவிட்டு செவ்வாய்க்  கிழமை இரவு அரண்மனை வடக்கு தெருவில்  வந்து  கொண்டிருந்த போது, எதிரே கும்பலாக வந்த  ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு  அவரை இரட்டை மாட்டு வண்டியின் அச்சாணியை வைத்து  அவரை கழுத்தில் தாக்கியதில் இரத்தம் கொட்டிய நிலை யில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலின்பேரில் கோம்பை காவல்துறையினர் விரைந்து வந்து சதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்  சார்பு ஆய்வாளர் எஸ்.ராஜமாணிக்கம் ,கோம்பையைச் சேர்ந்த வாலிபர்கள்  மணிகண்டன் , பிரவின் , சிலைராஜா,  விக்னேஷ்வரன், தீபக் ஆகியோரை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வரு கிறார்கள். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய நபர்  களை தேடி வருகிறார்கள்.

பட்டா மாறுதலுக்கு கையூட்டு  பெற்ற விஏஓ, தலையாரி கைது

 காரியாபட்டி, மே 24- விருதுநகர் மாவட்டம் மாந்தோப்பு கிராமத்தை சேர்ந்த வர் கிருஷ்ணன்.  இவர் பட்டா மாறுதலுக்காக விண்ணப்பித்  துள்ளார். பின்பு,  மாந்தோப்பு கிராம உதவியாளர் ராஜேஷ்  கண்ணனை அணுகியுள்ளார். அப்போது அவர்,  தனக்கும் கிராம நிர்வாக அலு வலர் குமாருக்கும் ரூ. 6 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.  ஆனால் லஞ்சம் தர விரும்பாத கிருஷ்ணன்,  லஞ்ச ஒழிப்பு  காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இதையடுத்து, ரசாயனப் பொடி தடவப்பட்ட ரூ.6 ஆயி ரத்தை போலீசார் கிருஷ்ணனிடம் வழங்கியுள்ளனர். அவர்  அந்த ரூபாய் நோட்டுகளை தலையாரி ராஜேஷ் கண்ணன்  மூலம் கிராம நிர்வாக அலுவலர் குமாரிடம் வழங்கி யுள்ளார். அப்போது அங்கு மாறுவேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புதுறை துணை காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையிலான  போலீசார் இருவரை யும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இலுப்பக்குடியில் அறிவியல் திருவிழா 

சிவகங்கை, மே 24- சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியத்தில் இலுப்பக்குடி  கிராமத்திலுள்ள வடக்கு குடியிருப்பு பகுதி யில்  அறிவியல் திருவிழா நடைபெற்றது. சாக்கோட்டை ஒன்றிய வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வ குமார் தலைமை வகித்தார். இல்லம் தேடிக் கல்வி திட்ட  வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். வானவில் மன்ற ஸ்டெம் கருத்தா ளர் ஜோதி  வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவ கங்கை மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி சிறப்புரை யாற்றினார். எளிய அறிவியல் சோதனைகள், விந்தை கணக்குகள், புதிர் கணக்குகள், ஓவியங்கள் தீட்டுதல், மந்திரமா?தந்திரமா?, வடிவங்கள் அமைத்தல், ஓரிகாமி போன்ற செயல்பாடுகளை மாணவ மாணவிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.

தொழிலதிபர் மறைவுக்கு  முன்னாள் அமைச்சர் அஞ்சலி

விருதுநகர், மே 24- மறைந்த தொழிலதிபர், கல்வியாளர் மற்றும் மதுரை  மீனாட்சி அம்மன் கோவில்  தர்க்கார்  கரு முத்துக்கண் ணன்  காலமானார்.  அவரது உடலுக்கு முன்  னாள் அமைச்சரும்  அதிமுக  கொள்கை பரப்பு துணைச்  செயலாளருமான  மாஃபா க. பாண்டியராஜன்  நேரில் சென்று அஞ்சலி செலுத்தி னார்.

விளம்பர பதாகை பொருத்தியவர் மின்சாரம் தாக்கி பலி

விருதுநகர், மே.24- விருதுநகர் கச்சேரி சாலையில் புதிய வணிக வளா கம் கட்டப்பட்டுள்ளது. அதன் 2 ஆவது மாடியில் விளம்பர  பதாகை வைக்கும் பணியில் கருப்பசாமி நகரில் உள்ள   காலனியைச் சேர்ந்த சுரேஷ்குமார்(45) என்பவர் ஈடுபட்டுக்  கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக  விளம் பர பதாகையில் மின்சாரம் பாய்ந்தது. இதையடுத்து, சுரேஷ்குமார் மீது மின்சாரம் தாக்கியதால், அவர் கீழே  விழுந்துள்ளார். படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தி னர் மீட்டு, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்து வர்கள் அங்கு முதலுதவி சிகிச்சையளித்தனர். ஆனால்,  சிறிது நேரத்தில் சுரேஷ்குமார் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து விருதுநகர் மேற்கு காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுவுக்கு அடிமையான  தந்தையால் மகன் தற்கொலை

தேனி, மே 24- தேனி மாவட்டம், கம்பம் குரங்கு மாயன் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி கவிதா. இவர்  களுக்கு ரோகேஷ்(20), அஸ்வந்த்(19) என 2 மகன்கள்  உள்ளனர். ஜெயக்குமார் மதுப்பழக்கத்திற்கு அடிமை யானதால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது.  இந்நிலையில் உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு  குடும்பத்துடன் சென்றனர். அப்போது ஜெயக்குமார் மது  அருந்தி வந்துள்ளார். இதனால் வேதனை அடைந்த மகன்  ரோகேஷ் தனது தந்தையை கண்டித்துள்ளார். மேலும் மன உளைச்சலில் இருந்த அவர் தனது  வீட்டுக்கு வந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து  கொண்டார். இதுகுறித்து கம்பம் வடக்கு காவல்நிலை யத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.