districts

48 சவரன் நகை, பணமோசடி செய்த போலிச் சாமியார் தலைமறைவு

விருதுநகர், ஜூலை 19- அருப்புக்கோட்டையில் நகைளை வைத்து பூஜை செய்தால் “அருளும் பொரு ளும்“ கிடைக்கும் என எதுகை மோனை யாக பேசி ஏமாற்றி பல பெண்களிடம் பணம் மற்றும் நகைகளை வாங்கிக் கொண்டு தலைமறைவாகிய போலிச் சாமியாரை போலீசார் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் மகாலெட்சுமி(63). இவர் தட்டச்சு நிலைய ஆலோசகராக உள்ளார். இவரிடம் சொக்க லிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த குருசாமி என்பவர், தான் வாசியோக பயிற்சி கற்றுத்  தருவதாக கூறியுள்ளார். பின்பு, டிரஸ்ட் துவங்க பணம் வேண்டுமெனவும், சிறிது காலம் கழித்து பணத்தை திருப்பித் தருவ தாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய மகா லெட்சுமி ரூ.6லட்சம் பணத்தை பல தவணை களில் குருசாமியிடம் தந்தாராம். மேலும்,  நகை வைத்து பூஜை செய்தால் “அருளும்  பொருளும்“ கிடைக்கும் என ஆசை வார்த்  தையை கூறியுள்ளார். இதனை நம்பிய மகாலெட்சுமி 9 சவரன்  தங்க நகையை கொடுத்துள்ளார். பின்பு,  48 நாட்கள் கழித்து நகையை கேட்டுள் ளார். அப்போது, போலிச் சாமியார் குரு சாமி, தீர்த்தயாத்திரை சென்று வந்த  பின்பு நகையை தருவதாக கூறியுள்ளார். ஆனால், நகையைம், பணத்தையும் திரும்பத் தரவில்லை. மேலும் இதே போல் பல பெண்களை ஏமாற்றி மொத்தம்  ரூ.15.35 லட்சம் ரொக்கப் பணத்தையும், 48 சவரன் தங்க நகைகளை வாங்கி ஏமாற்றி விட்டு குருசாமி தலைமறைவாகிட்டாராம். எனவே, பணம் மற்றும் நகைகளை மீட்டுத் தரக் கோரி மகாலெட்சுமி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார். இதையடுத்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து போலிச் சாமியார் குருசாமியைத் தேடி வருகின்றனர்.