districts

img

தென்காசி மாவட்டத்தில் 40 பேர் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தனர்

தென்காசி, டிச. 1 தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் தேன் பொத்தை கிராமத்தில் ஆண், பெண்களுக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் புதிய கிளை அமைக்கப் பட்டது. புதன்கிழமை அன்று தென்காசி யில்நடைபெற்ற முப்பெரும் விழாவிற்கு வருகை தந்த கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ. வாசுகி  முன்னிலையில் தேன் பொத்தை கிராமத்தில் 17 பெண்கள் உட்பட 40 பேர் புதிதாக கட்சியில் இணைந்தனர்.  இதையொட்டி கட்சி கிளை அமைத்து கட்சிக் கொடி ஏற்றப்பட்டது. கட்சிக் கொடியை உ. வாசுகி ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டச் செயலா ளர்  உ.முத்துப் பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேல் மயில், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பால்ராஜ். ஆயிஷா பேகம், அருண்  கிளைச் செயலா ளர்கள் மைதீன் முகமது காசிம் அப்துல் ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். ஆண்கள்  கிளைக்கு முத்தையா செய லாளராகவும் பெண்கள்  கிளைக்கு திரு வளர் செல்வி செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். புதிதாக கட்சியில் இணைந்தவர்கள் தென் காசியில் நடை பெற்ற முப்பெரும் விழாவில் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

;