மதுரை மாநகராட்சி மண்டலம் 4 வார்டு எண்.43 முனிச்சாலை பகுதியில் சிறப்பு தூய்மை பணியினை மேயர் வ.இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர்.கா.ப.கார்த்திகேயன் ஆகியோர் வியாழனன்று துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர் முகேஷ்சர்மா, நகரப்பொறியாளர் அரசு, நகர்நல அலுவலர் மரு.ராஜா, உதவி ஆணையாளர் சுரேஷ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், சுகாதார அலுவலர் சிவசுப்பிர மணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.