பாம்பு கடித்த 4 பேர் சிகிச்சைக்காக அனுமதி
திண்டுக்கல், செப்.15- திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் பாம்பு கடித்ததில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோபால்பட்டி அருகேயுள்ள அய்யாபட்டி பகுதி யைச் சேர்ந்த தொப்பையா என்பவரது மனைவி மருதாயி (55). இவர் அய்யாபட்டி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் வேலை செய்துவிட்டு திரும்புகையில் காலில் பாம்பு கடித் துள்ளது. இவர் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதே போல் வடுகம்பாடி அருகேயுள்ள வரதராஜ புரம் பகுதியைச் சேர்ந்த முத்து என்பவரின் மனைவி வெங்கடம்மாள் (41). இவர் தனது வீட்டின் அருகே வேலை செய்து கொண்டிருந்த போது பாம்பு கடித்தது. இவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கருங்குளம் அருகேயுள்ள வாவூர் பகுதியைச் சேர்ந்த சாலமன் சவரிராஜ் (43) தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, பாம்பு கடித்தது. இவரும் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அழகர்நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள கஸ்தூரி பாய் நகரைச் சேர்ந்த முருகன் (56) மல்லையாபுரத்தில் உள்ள தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டி ருந்த போது, பாம்பு கடித்தது. இவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விவசாயிகளுக்கான பயிற்சி முகாம்
திருவில்லிபுத்தூர், செப்.15- திருவில்லிபுத்தூர் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் சம்பந்தமாக விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் கு.தனலட்சுமி தலைமை வகித்தார். பருத்தி ஆராய்ச்சி நிலைய தலைவர் இரா.வீரபுத்திரன், ஓய்வு பெற்ற வேளாண்மை இணை இயக்குநர் முத்து முனியாண்டி, வட்டார தொழில் நுட்ப மேலாளர் ஜோதி மஞ்சுளா ஆகி யோர் பேசினர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை விரிவாக்க சீரமைப்பு திட்ட அலுவலர் மாரிமுத்து செய்திருந்தார்.
பள்ளியில் தவறி விழுந்த மாணவர் சுயநினைவு இழப்பு
பழனி, செப்.15- திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரின் மகன் சதீஷ்குமார் (12). இவர் பழனியில் செயல்பட்டு வரும் அக்சயா அகாடமி பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், செப்டம்பர் 9 அன்று பள்ளியில் உள்ள ஊஞ்சலில் விளையாடி கொண்டிருந்தபோது, தவறி கீழே விழுந்துள்ளார். ஆனால், பள்ளி நிர்வாகம் இது குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்காமல் பழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதித்தனர். மேலும் சிறுவனை மேல் சிகிச்சைக்கு கோவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிறுவன் சுயநினைவை இழந்துள்ளார். இதனால், மாவட்ட ஆட்சியர் ஆணையின் படி, பள்ளி கல்வி துறை பழனி துணை ஆட்சியர் பள்ளியை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.
டெங்கு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு
சின்னளப்பட்டி, செப்.15- வத்தலக்குண்டு மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வத்தலக்குண்டு பேரூராட்சி மற்றும் சுகாதா ரத் துறை சார்பில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை எலிசபெத் பாத்திமா தலைமை வகித்தார். வத்தலக்குண்டு பேரூ ராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன், துணைத் தலைவர் தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பேரூராட்சிகளின் துணை இயக்குநர் மனோரஞ்சிதம், வத்தலக்குண்டு பேரூராட்சி தலைமை எழுத்தர் செல்லப்பாண்டி, பேரூராட்சி கவுன்சிலர் ராமுத்தாய் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தேனியில் ரயில்வே சரக்கு போக்குவரத்து துவக்கம்
தேனி, செப்.15- தேனி ரயில் நிலையத்தில் பெரிய அளவில் சரக்குகள் கையாள புதிய ரயில்வே சரக்கு போக்குவரத்து வசதியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய சரக்கு அலுவல கம் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை வாரம் முழுவதும் செயல்படும். இங்கு பெட்ரோலிய பொருட்கள், நிலக்கரி மற்றும் கோக் கரி தவிர மற்ற பொருட்களை கையாள அனுமதிக்கப்படும். இது மதுரை கோட்டத்தின் 19-வது சரக்கு முனையமாகும். இந்த சரக்கு போக்குவரத்து அலுவலகம் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய ரயில்வே சரக்கு இயக்க தகவல் அமைப்பு (Freight Operations Inform ation System-FOIS) என்ற மென் பொருள் வாயிலாக சரக்கு பெட்டிக ளை பதிவு செய்வது, வாடிக்கை யாளருக்கு சரக்கு பெட்டிகளை பதிவு மூப்பு அடிப்படையில் வழங்கு வது, சரக்குகளை ஏற்றுவது இறக்கு வது போன்ற தகவல்களை பதிவது, வாடிக்கையாளர்களுக்கு சரக்கு களை பெற்றுக் கொண்டதற்கு அத்தாட்சியாக ரயில்வே ரசீதுகளை வழங்குவது, சரக்கு ரயில் எங்கு வந்து கொண்டிருக்கிறது போன்ற தகவல்களை அறிவது போன்ற பணிகளை கணிப்பொறி வாயி லாக செயல்படுத்த முடியும். சரக்கு அலுவலக ரயில் பாதை அருகே சரக்குகளை கையாள 650 மீட்டர் நீளமும், 16.20 மீட்டர் அகலமும் கொண்ட கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மழைக் காலங்களிலும் தங்கு தடை இன்றி ஒரே நேரத்தில் 42 சரக்கு பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலை கையாள முடியும். இங்கு, வர்த்தகர்கள் அறை மற்றும் கழிப்பறை குளியல் அறை வசதியுடன் ஆண், பெண் தொழிலாளர்களுக்கு தனித்தனி ஓய்வு அறைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. சரக்குக ளை லாரிகளில் விரைவாக ஏற்றிச்செல்ல தரமான தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. போது மான விளக்கு வசதிகளுடன் இரவு நேரத்திலும் சரக்குகளை தடை யில்லாமல் கையாள போதுமான மின்விளக்குகள் மற்றும் உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சரக்கு நிலைய நடைமேடை உட்பட பல்வேறு நவீன வசதிகள் ரூ.5 கோடி செலவில் ஏற்படுத் தப்பட்டுள்ளன. மதுரை போடி நாயக்கனூர் மின்மயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சரக்குகளை ரயில் பாதையும் விரை வில் மின்மயமாக்கப்படும்.
இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
இராமேஸ்வரம், செப்.15- இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் இருந்து புதன்கிழமை மீன்பிடிக்க சென்ற 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த னர். இதேபோல், புதுக்கோட்டை மாவட்டத் தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 9 மீன வர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களின் மூன்று படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிந்து ஊர் காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி யாழ்பாணம் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையை கண்டித்தும், மீனவர்கள் மற்றும் படகு களை விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இராமேஸ்வரம் மீனவர்கள் வெள்ளிக் கிழமை முதல் வேலை நிறுத்தம் போராட் டத்தை துவக்கியுள்ளனர். போராட்டத்தால் இராமேஸ்வரம் துறைமுகத்தில் 650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப் பட்டுள்ளன.
அண்ணா பிறந்த நாள் விழா
சின்னாளப்பட்டி, செப்.15- முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 15 அன்று திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை திமுக தெற்கு ஒன்றியக்குழு சார்பில் ஒன்றியச் செயலாளர் மணிகண்டன் தலைமையில் நால்ரோட்டில் அண்ணா படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பேரூர் செயலாளர் ஜோசப் கோவில்பிள்ளை முன்னிலை வகித்தார். பேரூர் துணைச் செயலாளர் கதிரேசன், பேரூராட்சி தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன், துணைத் தலைவர் எஸ்பி.முருகேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் சின்னாளப்பட்டியில் நடைபெற்ற விழாவில் பேரூராட்சி மன்ற தலைவர் பிரதீபா கனக ராஜ், துணை தலைவர் ஆனந்தி பாரதிராஜா, நகரச் செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் எஸ்.ஆர்.முருகன், அவைத்தலைவர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செப்.19-ல் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
விருதுநகர், செப்.15- விருதுநகர் மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் செப்டம்பர் 19 அன்று காலை 11 மணிக்கு சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய வருவாய் கோட்ட அலுவல கங்களில் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே, விவசாயிகள் தங்களது கோரிக்கை களை மனுவாக வழங்கி தீர்வு காணலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பட்டாசு தயாரித்தபோது விபத்து : 2 வாலிபர்கள் பலி
நத்தம், செப்.15- நத்தம் பகுதியில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டுப்பட்டி மங்கம்மாள் சாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜா (25), கருப்பையா (32). இவர்கள் தனியாருக்கு சொந்தமான மாந்தோப்பில் திருவிழா, வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்காக பட்டாசு தயாரித்து அதனை விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். வெடி தயாரிக்கும் பணியில் வெள்ளியன்று ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக வெடி பொருட்கள் வெடித்து தீப்பிடித்ததில் ராஜா, கருப்பையா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரி ழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், துணை கண்காணிப்பா ளர் உதயகுமார், தாசில்தார் ராமையா ஆகியோர் பார்வையிட்டனர். இது போன்று நத்தம் பகுதியில் பண்டிகை நேரங்களில் பல இடங்களில் அனுமதியில்லாமல் நாட்டு வெடிகள் தயாரிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மனைவி, மாமனார் கொலை: கணவருக்கு இரட்டை ஆயுள்
தேனி, செப்.15- போடி அருகே சுந்தரராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுருளிராஜ் (47). இவரது மனைவி ஜெயந்தி (42). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலை யில், இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், ஜெயந்தி கோபித்துக்கொண்டு போடி அருகே ரெங்கநாதபுரம் கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். சுருளிராஜ் தனது மனைவியை தன்னுடன் வீட்டிற்கு வருமாறு மனைவியை வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில், மனைவி வர மறுத்ததால் ஆத்திரம டைந்த சுருளிராஜ் 13.09.2016 அன்று மனைவி ஜெயந்தி, மாமனார் கனகராஜ் ஆகியோரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டார். இது தொடர்பாக வழக்கு தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் குற்றவாளி சுருளிராஜ் 5 ஆண்டுகளாக ஆஜராகாத நிலையில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப் பட்டார். பின்னர் கைது செய்யப்பட்டு, முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் சுருளிராஜுக்கு ஒரு மாதம் மெய்க்காவல் சிறை தண்டனையும், இரண்டு கொலைக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராத தொகை கட்ட தவறினால் ஒரு மாதம் மெய்க்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
வேன், அரசு பேருந்து மோதி விபத்து
மில் தொழிலாளர்கள் காயம்
திண்டுக்கல், செப்.15- திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவை அடுத்த அய்யம்பாளையம் பிரிவு அருகே மருதாநதி ஆற்று பாலத்தில் திண்டுக்கல்லை நோக்கிச் சென்ற அரசு பேருந்தும், வத்தலக்குண்டு நோக்கி வந்த தனியார் மில் வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மில் வேன் பாலத்தின் நடுவில் கவிழ்ந்தது. வேனில் பய ணித்த 7 பெண்கள் உட்பட 8 மில் தொழிலாளர்களும் வேன் ஓட்டுநரும் படுகாய மடைந்தனர். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரு கிறார்கள்.