சென்னை, டிச.12- வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. புயல் கரையை கடந்த பின்னரும் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த உயரம் 24 அடியாகும். இதில் 3645 மி.கன அடி தண்ணீர் சேமித்து வைக்க லாம். மழை காரணமாக ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து ஏரியில் இருந்து கடந்த 9 ஆம் தேதி முதல் வினாடிக்கு 100 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. மொத்த உயரமான 24 அடியில் 22.43 அடியை எட்டியது. தொடர்ந்து ஏரிக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்ததையடுத்து பாதுகாப்பு கருதி உபரி நீர் திறப்பை 1000 கன அடியாக உயர்த்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தர விட்டார். இதையடுத்து, திங்க ளன்று(டிச.12) ஏரியிலிருந்து 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதற்கிடையே செம்பரம் பாக்கம் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருவதால், பாதுகாப்பு கருதி மேலும் 2000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகி றார்கள். காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள் ளனர்.