திருவில்லிபுத்தூர்,அக்.1- விருதுநகர் மாவட்டம், நத்தம்பட்டி அருகே உள்ள இலந்தை குளம் கிராம நிர்வாக அலுவலர் மாயகிருஷ்ண னுக்கு இலந்தைகுளத்திற்கு மேற்கே உள்ள சந்தன பெரு மாள் என்பவருடைய காட்டில் அரசு அனுமதி இல்லாமல் இரவு பகலாக டிராக்டர்களில் மணல் கடத்தப்படுவதாக தக வல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து வருவாய்த்துறையினரும் போலீசாரும் விரைந்து சென்று பார்த்த போது அங்கு மூன்று டிராக்டர்களில் அரசு அனுமதி இல்லாமல் ஒரு கும்பல் மணல் அள்ளிக் கொண்டிருந்தது. அதிகாரி களை பார்த்ததும் அனைவரும் 3 டிராக்டர்களை அதே இடத்தில் விட்டு விட்டு தப்பிஓடினர். இதுகுறித்து நத்தம் பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து 3 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர்.தப்பி ஓடியவர்களை தேடி வரு கின்றனர்.