விடுதலைப்போராட்ட வீராங்கனை வேலுநாச்சியார் 293 ஆவது பிறந்தநாள் விழா அரசு விழாவாக சிவகங்கை சூரக்குளத்தில் அவரது நினைவு மண்டப வளாகத்தில் ஜனவரி 3 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதன ரெட்டி, சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசி ரவிக்குமார், மாங்குடி ,சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணி முத்து, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் மற்றும் பலர் பங்கேற்றனர்.