districts

img

வேலை வழங்க வேண்டுமென வலியுறுத்தி 250 பெண்கள் நகராட்சி ஆணையரிடம் 280 மனு

உசிலம்பட்டியில் 100 நாள் வேலையை நகராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்ததி வேலை வழங்க வேண்டுமென வலியுறுத்தி 250 பெண்கள் நகராட்சி ஆணையரிடம் 280 மனுக்களை  அளித்தனர். மாதர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் செ.முத்துராணி, ஒன்றியத் தலைவர் காசம்மாள், ஒன்றியச் செயலாளர் எழில் அமுது, மார்க்சிஸ்ட் கமயூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பெ.ராமர் ஆகியோர் பங்கேற்றனர். மேற்கு ஒன்றியம் சிக்கந்தர்சாவடியில்  வீடற்ற ஏழை மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. மாதர் சங்க மாவட்டத் தலைவர் சி. மலர்விழி, மேற்கு ஒன்றியத் தலைவர் அமிர்தவள்ளி, ஒன்றியச் செயலாளர் சரஸ்வதி,  ஒன்றிய பொருளாளர் இந்திரா உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.