districts

img

திடக்கழிவு மேலாண்மை பணிக்கு 200 மூன்று சக்கர சைக்கிள்கள் மேயர், துணை மேயர், ஆணையாளர் வழங்கினர்

மதுரை, மார்ச்.11-  மதுரை மாநகராட்சி செல்லூர் வாகன காப்பகத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிக்காக 200 புதிய மூன்று சக்கர சைக்கிள்கள் மற்றும் 342 காம்பேக்டர் குப்பை தொட்டிகளை மாநகராட்சி  மேயர் வ.இந்திராணி, துணை மேயர் டி. நாகராஜன், மாநகராட்சி ஆணையாளர் மரு.கா.ப. கார்த்திகேயன், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன் ஆகியோர் வெள்ளியன்று  பயன்பாட்டிற்கு வழங்கினர்.  மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுப் பகுதிகளில் உள்ள வீடுகளில் சேரும்  திடக்கழிவுகளை வீடுகள்தோறும் சேகரிப்பு செய்வதற்கு 15-ஆவது மத்திய நிதிக்குழு (2020-2021) திட்டத்தின் கீழ் 200 புதிய மூன்று சக்கர சைக்கிள்கள் ரூ.59.80 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ளது.  இவற்றை மேயர், ஆணையாளர், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர், துணை மேயர் ஆகியோர் கொடியசைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.  குப்பைகளை எளிதில் அகற்றுவதற்கு புதிய காம்பேக்டர் குப்பைத் தொட்டிகள் 600 எண்ணம் ரூ.265 கோடி மதிப்பீட்டில் வாங்கப்பட்டு அதில் முதல்கட்டமாக 342 குப்பைத்தொட்டிகள் வார்டுகளுக்கு வழங்கப்பட்டன.  இந்நிகழ்ச்சியில், 29-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் லோகமணி உடனி ருந்தார். அதனைத் தொடர்ந்து மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூடத்தில் மாநகராட்சியின் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஒவ்வொரு துறை வாரியாக மேயர், ஆணையாளர், துணை மேயர் ஆகியோர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் துணை ஆணையாளர் சங்கீதா, நகர்நல அலுவலர் மரூ.ராஜா, நகரப்பொறியாளர் (பொ) அரசு, கண்காணிப்பு பொறியாளர் அன்பழகன், உதவி ஆணை யாளர்கள், செயற் பொறியாளர்கள், உதவி நகர்நல அலுவலர், உதவி செயற் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.