districts

ஓடையில் மணல் திருடியவர் கைது 2 டிராக்டர் பறிமுதல்- 3 பேர் மீது வழக்கு

தேனி, ஜன.3- ஆண்டிபட்டி அருகே பாலக்கோம்பை ஓடையில் மணல் திருடியவரை கைது செய்து 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மணல் திருடிவந்த டிராக்டரை பறிமுதல் செய்ய விடாமல் தடுத்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஆண்டிபட்டி அருகே பாலக்கோம்பை கிராமத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் உள்ள ஓடையில் மணல் திருட்டு நடைபெற்று வருவதாக ராஜதானி காவல் துறையினருக்கு தகவல் வந்தது. தகவலின் பேரில் ஞாயிறன்று காவல்துறையினர் சம் பவ இடத்திற்கு சென்று,

மணல் திருடிய டிராக்டரை பறிமுதல் செய்ய முயன்றனர்.  அப்போது அந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு டிராக்டரை பறிமுதல் செய்ய விடாமல் தடுத்து எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பாலக்கோம்பை ஓடையில் எங்கள் கிராமத்திற்கு தேவையான மணல் மட்டும் எடுப்பதாக கூறி காவல்துறையினருடன் கிராம மக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட னர். பின்னர் காவலர்கள் தங்களை பணி செய்யவிடாமல் தடுத்தால் உங்கள் மீது வழக்கு பதிவு செய்வோம் என்று தெரிவித்த பிறகு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.  அதன்பிறகு மணல் திருடிய 2 டிராக்டர் களை பறிமுதல் செய்து, காவல்  நிலை யத்திற்கு கொண்டு வந்தனர். விசாரணை யில் மணல் திருடிய பார்த்தசாரதி (28), சுந்தர ராஜ், பிரதீப் குமார், சேகர் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். அதில் பார்த்தசாரதி என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  அதன்பிறகு கிராம மக்கள் சாலை மறி யலில் ஈடுபட்டதால், காவல்துறையினர், வருவாய் துறை மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் ஆகியோரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக, பாலக் கோம்பை கிராமத்தை சேர்ந்த சுப்புராஜ், ரமேஷ்குமார், மாடசாமி, வெள்ளைச்சாமி, சிதம்பரம், மகாத்மா, நாகராஜ், ராஜ்குமார், ராமர், புயல் பாண்டி, ராஜேஷ், சசிகுமார் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.