districts

மதுரை முக்கிய செய்திகள்

போடியில் மது பாட்டில் பதுக்கிய 2 பேர் கைது

தேனி, ஜூலை 30-  தேனி மாவட்டம் போடி பகுதியில் மதுபாட்டில்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக வந்த தகவலை யடுத்து காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் போடி சேதுபாஸ்கரன் தெருவில் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. விசாரணையில் மதுபாட்டில்கள் வைத்து விற்பனை செய்தது சேதுபாஸ்கரன் தெருவை சேர்ந்த தெய்வகண்ணு மகன் பாண்டி (70) என்பது தெரிந்தது.  இவர் மீது வழக்கு பதிவு செய்த போடி நகர் காவல்துறை யினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  இவர் மீது ஏற்கனவே கஞ்சா, மதுபாட்டில் பதுக்கிய குற்றத்திற்காக 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் 15 ஆவது முறையாக கைது செய்து சிறை யிலடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல் போடி கீழத்தெருவை சேர்ந்த கருத்தி வீரன் மகன் தங்கப்பாண்டி (52) என்பவர் தனது பெட்டிக்  கடையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை  செய்தது தெரிந்தது. இவர் மீதும் போடி நகர் காவல்துறை யினர் வழக்கு பதிவு செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

காலமானார் 

இராமநாதபுரம்,ஜூலை 30- இராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா பெருநாழி கிராமம், காத்தனேந்தல் ஊராட்சி நடுநிலைப்பள்ளி பட்ட தாரி ஆசிரியர் ஆர்.இராஜேஸ்வரன் காலமானார். அவ ருக்கு வயது 48. அவரது உடலுக்கு திரைப்பட நடிகரும் எழுத்தாள ருமான வேல.இராமமுர்த்தி, சிபிஎம் மாவட்டச் செய லாளர் வி.காசிநாததுரை, சிஐடியு நிர்வாகி இரா.முத்து விஜயன், சிபிஎம் தாலுகா செயலாளர் அ.கண்ணதாசன், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர்கள், திரைப்பட நடிகர் காலரா கந்தசாமி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

திண்டுக்கல்லில் அழுகிய நிலையில் இளம்பெண் உடல் மீட்பு 

திண்டுக்கல், ஜுலை 30- திண்டுக்கல் பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் சேகர். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது  மகள் ஹரிப்ரியா (22). பட்டதாரி பெண்ணான ஹரிப்பிரி யாவை கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொள்ளுமாறு பெற்றோர் கூறியுள்ளனர். அதற்கு மறுப்பு  தெரிவித்த ஹரி பிரியா மேற்கொண்டு படிக்க வேண்டும்  என கூறியுள்ளார். அதனை பெற்றோர் ஏற்கவில்லை. இத னையடுத்து தந்தையுடன் சண்டை போட்ட ஹரிப்பிரியா கடந்த 2 நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை  செய்து கொண்டதாக கூறப்படுகிறது.  ஹரிப்பிரியா இறந்த தகவலை வெளியே சொல்லா மல் இரண்டு நாட்களாக சேகர் மற்றும் அவரது மனைவி நளினி பிரேதத்துடனே வீட்டில் இருந்துள்ளனர். வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.  இதையடுத்து அக்கம் பக்கத்தினர் திண்டுக்கல் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ  இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் ஹரிப்பிரியா வின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு  பதிவு செய்த போலீசார் தந்தை சேகர் மற்றும் நளினி யிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பைக்குகள் மோதியதில் விவசாயி பலி

கடமலைக்குண்டு, ஜுலை30- தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே வாய்க்கால்  பாறை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 50).  தொழிலாளி. ஞாயிற்றுக்கிழமை சந்திரனும் கருத்திய புரத்தை சேர்ந்த ராசு (44) என்பவரும் ஒரே பைக்கில் மூலக்கடை நோக்கி சென்று கொண்டிருந்தனர். பைக்கை  சந்திரன் ஓட்டி சென்றார். மூலக்கடை அருகே சென்று கொண்டிருக்கும்போது எதிரே மயிலாடும்பாறை நோக்கி அதி வேகமாக பைக்கில் வந்து கொண்டிருந்த அருகுவெளி கிராமத்தைச் சேர்ந்த குமார் (46) என்பவர் சந்திரன் பைக் மீது மோதினார். இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட சந்திரன் சம்பவ இடத்திலேயே பலியா னார். மற்ற இருவருக்கும் தலை, கால் உள்ளிட்ட பகுதி களில் காயங்கள் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் காய மடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கடமலைக்குண்டு போலீசார் சந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவர் பலி

விருதுநகர், ஜூலை.30- விருதுநகரில் தனியார் நீச்சல் குளத்தில் குளிக்கச் சென்ற மாணவர் ஒருவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விருதுநகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் என்ப வரது மகன் அருண்குமார் விக்ரம் (13). 9ஆம் வகுப்பு  படித்து வந்தார். இந்நிலையில், ஞாயிறன்று விடுமுறை  என்பதால், தனியார் கல்லூரியில் உள்ள நீச்சல்குளத் திற்கு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, அருண்குமார் விக்ரமுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு எதிர்பாராதவிதமாக நீரில்  மூழ்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கி ருந்தவர்கள் அவரை மீட்டு, தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். பின்பு, மேல் சிகிச் சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அருண்குமார் விக்ரம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தி னர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

லஞ்சம் வாங்கிய புகாரில் தேனி  மருத்துவ கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம்

தேனி, ஜூலை 30- லஞ்சம் வாங்கிய புகாரில் தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் மீனாட்சிசுந்தரத்திடம், மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் கேண்டீன் நடத்து பவர்கள் பணம் கொடுப்பது போல ஒரு  வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக  பரவியது. இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் டாக்டர் மீனாட்சிசுந்தரம் கூறு கையில், என்னிடம் லஞ்சம் கொடுப்பதாக  பரவும் வீடியோ அப்பட்டமான பொய்.  நான் யாரிடமும் பணம் பெறவில்லை. மருத்துவமனை, கல்லூரிக்கே தண்ணீர் தட்டுப்பாடு உள்ள நிலையில், கேண் டீன்களுக்கு தினமும் 2 லட்சம் லிட்டர் வரையில் தண்ணீர் அனுமதியின்றி எடுக்கப்பட்டது. இதனை நான் கண்டு பிடித்து குடிநீர் இணைப்பை துண்டித்தது டன், மீட்டர் பொருத்தப்பட்ட மோட்டார் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுத்தேன். இதுதவிர கேண்டீன் செயல்படும் இடம் அனுமதிக்கப்பட்ட அளவை விட மருத்துவமனை இடத்தை யும் சேர்த்து ஆக்கிரமிப்பு செய்திருந்த னர். இதனையும் அகற்றும்படி உத்தர விட்டேன். இதனை மனதில் வைத்து கொண்டு எனக்கு அவப்பெயர் ஏற்படுத்தும்  நோக்கத்துடன் இதுபோன்ற மார்பிங் செய்யப்பட்ட வீடியோவை பரப்பி உள்ள னர். வீடியோ பரப்பியவர்கள் மீது நான் மானநஷ்ட வழக்கு தொடர உள்ளேன் என்றார்.  இந்த நிலையில் தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் தற்  காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள் ளார்.உணவக உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கிய புகாரில் மீனாட்சி சுந்தரம் மீது  அமைச்சர் மா.சுப்பிரமணியன் நட வடிக்கை மேற்கொண்டுள்ளார். மேலும் மீனாட்சி சுந்தரம் மீது துறை ரீதியான நட வடிக்கை மேற்கொள்ளவும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை: சுங்கச்சாவடியில்  லாரி மோதியதில் ஒருவர் பலி

மதுரை, ஜூலை 30- மதுரை பாண்டிகோவில் - ரிங்ரோடு வண்டியூர் அருகே உள்ள மஸ்தான்பட்டி பகுதியில் சுங்கச்சாவடி செயல்பட்டு வரு கிறது. ஞாயிற்று விடுமுறை தினம் என்பதால்  வழக்கத்துக்கு அதிகமாக வாகனங்கள் அந்த சுங்கச்சாவடி வழியாக கடந்து சென்ற வண்ணம் இருந்தன.  இந்த நிலையில் ஆந்திராவில் இருந்து அரிசி மூட்டைகள் ஏற்றிக்கொண்டு கேரளா  சென்ற லாரியை பாலகிருஷ்ணன் என்பவர்  ஓட்டி வந்தார். அதில் 31 டன் எடையுள்ள அரிசி இருந்துள்ளது. மதியம் 12.30 மணி யளவில் அந்த லாரி மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே வந்தபோது டிரைவ ரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி யது. லாரி டிரைவர், வாகனத்தை நிறுத்த முயன்ற போது அது அதிவேகமாக சென்று  சுங்கச்சாவடியில் பணம் வசூல் செய்யும்  மையத்தின் வெளிப்பகுதியில் பயங்கர மாக மோதியது. அப்போது அங்கு பணி யில் இருந்த சக்கிமங்கலம் சேர்ந்த சதீஷ்குமார் (37) என்பவர் மீது லாரி மோதிய தில் சம்பவ இடத்திலேயே அவர் பலியா னார். இதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.  இருப்பினும் அந்த லாரி தறிக்கட்டு ஓடி, எதிர்புறத்தில் சுங்கச்சாவடியில் நின்றி ருந்த ஆம்னி வேன் உள்ளிட்ட வாகனங்கள்  மீது மோதியது. இதில் அந்த வாகனங்க ளில் பயணித்த 2 பேர் பலத்த காயமடைந்த னர். அதிவேகமாக லாரி மோதியதால், லாரி யில் இருந்த அரிசி மூட்டைகள் அந்த பகுதி யில் சிதறி கிடந்தன.  இதனைத் தொடர்ந்து அந்த பகுதி மக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் உயிரிழந்த சதீஷ்குமார் உடலை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் போக்குவரத்து புல னாய்வு காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் சந்தை கடலை எண்ணெய், பாமாயில், மல்லி விலை உயர்வு எண்ணெய் பலகார வியாபாரிகள் அதிர்ச்சி

விருதுநகர், ஜூலை 30- விருதுநகர்  சந்தையில் பாமாயில், கடலை எண்ணெய் மற்றும் மல்லி ஆகிய வற்றின் விலை உயர்ந்து காணப்பட்டது.  இதனால், எண்ணெய் பலகார விற்பனை யாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு வரு கிறது. அதன் விபரம் வருமாறு : கடலை எண்ணெய்  கடந்த வாரம்  15 கிலோ  ரூ.3 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப் பட்டது. இந்த வாரம் திடீரென டின் ஒன்றுக்கு ரூ.100 வரை உயர்ந்தது. இதனால்  ரூ.3100க்கு கடலை எண்ணெய் விற்பனை யாகிறது. பாமாயில்  15 கிலோ கடந்த வாரம் ரூ. 1390க்கு விற்பனையாகி வந்தது. ஒரே  வாரத்தில் டின் ஒன்றுக்கு ரூ.70 வரை விலை  உயர்ந்ததால் தற்போது ரூ.1460க்கு விற் பனை செய்யப்படுகிறது. அதிர்ச்சி பொதுவாக எண்ணெய் பலகார விற்ப னையாளர்கள் சேவு, மிக்சர், முறுக்கு, அதி ரசம், சீடை, வடை, இனிப்பு வகைகள் ஆகியவற்றை தயார் செய்திட கடலை எண்  ணெய் அல்லது பாமாயிலை பயன்படுத்தி  வருகின்றனர். இந்த திடீர் விலை உயர்  வால் இவர்கள் பெரும் அதிர்ச்சியடைந் துள்ளனர். ஏனெனில் தாங்கள் தயாரிக்கும்  பலகார வகைகளுக்கு அடிக்கடி விலையை  ஏற்றி, இறக்கம் செய்ய முடியாது. அவ்வாறு  செய்தால் பொது மக்கள் தாங்கள் வாங்கி சாப்பிடும் பலகாரங்களின் அளவை கணிச மாக குறைப்பார்கள். இதனால் வியாபாரம்  பெரிதும்  பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என  வேதனையுடன் தெரிவித்தனர். மல்லி நாடு வகை 40 கிலோ கடந்த வாரம் ரூ.2500 முதல் ரூ.3000  வரை விற்பனை யாகி வந்தது. இந்த வாரம் ரூ.300 உயர்ந்துள்  ளது. இதன் காரணமாக மூட்டை ஒன்று  ரூ.2800 முதல் ரூ.3100 வரை விற்பனையாகி வருகிறது.

நண்பனை கொன்ற வாலிபர் கைது

தேனி, ஜூலை 30- போடி அருகே வெள்ளிக்கிழமை இரவு  நண்பரை கொலை செய்த வாலிபர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். தேனி மாவட்டம், தேவாரம் அருகே கிருஷ்ணன்பட்டியை சேர்ந்தவர் பவுன்  ராஜ் மகன் கருப்பசாமி (36). கூலித் தொழி லாளி. இவரது நண்பர் சில்லமரத்துப் பட்டியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் ஜெயப்பிரகாஷ் (39). ஜெயப்பிரகாஷ் மீன்  வியாபாரம் செய்து வருகிறார். கருப்பசாமி யும், ஜெயப்பிரகாசும் பணம் கொடுத்து வாங்கிக் கொள்வர். இந்த நிலையில் கருப்பசாமி அடிக்கடி ஜெயப்பிரகாஷ் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதனால் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் கருப்ப சாமிக்கும் ஜெயப்பிரகாஷ் மனைவிக்கும் தொடர்பு இருப்பதாக பேசி வந்துள்ளனர். இதனால் கருப்பசாமியுடன் தகராறு செய்த ஜெயப்பிரகாஷ் குடும்பத்துடன் போடி பரமசிவன் மலைக்கோவில் அடி வாரத்தில் ஒரு வீட்டிற்கு குடிவந்தார்.  பின்னர் கருப்பசாமியை சமாதானப்படுத்து வதாகக் கூறி போடி அருகே ராசிங்காபுரம் - பொட்டிப்புரம் சாலையில் மது அருந்த அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சுருளிவேல் நிலம் அருகே தரிசு பகுதியில் கருப்பசாமியும், ஜெயப்பிரகாசும் மது அருந்தியுள்ளனர். அப்போது மீண்டும் தகராறு செய்த ஜெயப்பிரகாஷ் தான் மறைத்து வைத்திருந்த மீன் வெட்டும் அரி வாளால் கருப்பசாமியை வெட்டி கொலை  செய்துள்ளார். பின்னர் போடி தாலுகா காவல் நிலை யத்தில் அரிவாளுடன் சரணடைந்தார். இது குறித்து கருப்பசாமியின் தாயார் காளி யம்மாள் (58) கொடுத்த புகாரின் பேரில் போடி தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து ஜெயப்பிரகாஷை கைது செய்தனர்.

பத்தாண்டுகளாக பூட்டிக்கிடக்கும்  ஊராட்சி சேவை மையக் கட்டிடம்

சின்னாளப்பட்டி, ஜூலை 30- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றி யத்துக்கு உட்பட்டது எஸ்.மேட்டுப்பட்டி ஊராட்சி. இங்கு  ஊராட்சி சார்பில் பொதுமக்க ளின் சேவைக்காக கடந்த 2013-14 ஆம் ஆண்டு அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் அருகே ரூ.13.12 இலட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு மையத்துடன் கூடிய  புதிய ஊராட்சி சேவை மைய கட்டி டம் கட்டப்பட்டது, ஆனால் கட்டி முடிக்கப்பட்டு கடந்த பத்தாண்டுகளாக பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படாமல் பூட்டியே வைக் கப்பட்டுள்ளது. இதனால் புதிய சேவை மைய  கட்டிடத்தை சுற்றி முட்புதர்கள் வளர்ந்துள்ளன. இதனால் சமூக  விரோதிகள் கூடாரமாக மாறி யுள்ளது. எனவே புதிய ஊராட்சி சேவை மைய கட்டிடத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் 

தூத்துக்குடி, ஜூலை  30 தூத்துக்குடி கால்டுவெல்காலனி பகுதியைச் சேர்ந்த அழகுபிச்சை மகன்  கிங்ஸ்வின் (30) என்பவர் சனிக்கிழமை  தூத்துக்குடி - திருச்செந்தூர் மெயின் ரோடு பகுதியில் உள்ள ஒரு கல்லூரி  அருகே வந்து கொண்டிருந்தபோது அங்கு மதுபோதையில் வந்த  மர்மநபர்  கள் கிங்ஸ்வின்னிடம் தகராறு செய்து தவ றாக பேசி அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து கிங்ஸ்வின் ஞாயிறன்று அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு  செய்து காவல் நிலைய உதவி ஆய்வா ளர் கங்கைநாத பாண்டியன் மற்றும்  போலீசார் விசாரணை மேற்கொண்ட தில் தூத்துக்குடி அழகேசபுரம் பகுதி யைச் சேர்ந்த உதயகுமார் மகன் சோலை யப்பன் (எ) அபினாஷ் (19) மற்றும் தூத்துக்குடி சத்யாநகரைச் சேர்ந்த முரு கன் மகன் சூரியபிரகாஷ் (20) ஆகிய இருவரும் கிங்ஸ்வின்னிடம் தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இரு வரையும் கைது செய்தனர்.

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.9.50 லட்சம் மோசடி 3 பேர் மீது வழக்கு

அருப்புக்கோட்டை ஜூலை 30- அருப்புக்கோட்டை கலைஞர் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகன் இராஜ். இவர் கிராம உதவியாளர் வேலைக்கு தயாராகி வந்துள்ளார். இதை அறிந்த சுந்தரகோபி, தனக்கு தெரிந்த நரிக்குடியை சேர்ந்த  விஜயலட்சுமி என்பவர் உள்ளதாகவும் அவரிடம் பணம் கொடுத்தால் வேலை வாங்கி விடலாம் என ஆசை வார்த்தை  கூறியுள்ளார். இதை நம்பிய இராஜ் தனக்கும் தன்னுடைய மனைவி யின் சகோதரி கார்த்திகா என்பவருக்கும் வேலை வாங்க ரூ.9.50 லட்சத்தை விஜயலட்சுமி, சுந்தரகோபி மற்றும் சுந்தர கோபின் தந்தை முருகனிடம் வழங்கியுள்ளார். ஆனால் அவர்கள் சொன்னபடி வேலை வாங்கி தரவில்லை. எனவே, இராஜ், கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் பணத்தை திரும்ப தராமல் மூன்று  பேரும் ராஜ்க்கு மிரட்டல் விடுத்துள்ளனர். எனவே, இராஜ்  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் உத்தர வுப்படி குற்றப்பிரிவு போலீசார் 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.