districts

img

மேகமலை அருவியில் அடிப்படை வசதிகளை செய்து தருக!

சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை

கடமலைக்குண்டு, ஜுலை 13- தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் கோம்பைத்தொழு அருகே மேகமலை அருவி அமைந்துள்ளது. விடு முறை நாட்களில் அருவியில் சுற்றுலா பய ணிகளின் கூட்டம் அதிக அளவில் காணப்  படும். மேகமலை அருவிக்கு செல்லும்  சுற்றுலா பயணிகளிடம் மேகமலை ஊராட்சி சார்பில் கோம்பை தொழு கிரா மத்தில் சோதனைச்சாவடி அமைத்து வாகனத்திற்கு 20 ரூபாய் எனவும் வனத்  துறையினர் சார்பில் சுற்றுலா பயணி களுக்கு தலா 30 ரூபாய் எனவும் வசூல்  செய்யப்பட்டு வருகிறது.  இந்நிலையில் இரண்டு இடங்களில் பணம் வசூல் செய்தும் அருவியில் கார்  நிறுத்தம், பாதுகாப்பு வேலி உள்ளிட்ட  எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. மேலும் பெண்களுக்கான உடை மாற்றும் அறைகளும் பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. இதற்கிடையே கடந்த  சில மாதங்களாக பைக், கார் உள்ளிட்ட  அனைத்து வாகனங்களும் வனத்துறை யினர் சோதனைச் சாவடி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அருவிக்கு அரு கில் வரை தார் சாலை அமைக்கப்பட்டு இருந்தாலும் வனத்துறையினர் வாக னங்களை அனுமதிப்பதில்லை. இத னால் சுற்றுலா பயணிகள் வாகனங்களை  நிறுத்தி விட்டு சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் மிகுந்த சிர மப்படுகின்றனர்.

சிலர் நடந்து செல்ல முடி யாமல் வாகனங்களிலேயே அமர்ந்து விட்டு குளிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.  இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சுற்றுலா பயணிகள் சிலர் அருவிக்கு சென்றிருந்தனர். அப்போது வாகனத்தை  நிறுத்திவிட்டு அருவிக்கு நடந்து செல்லு மாறும், உணவுப் பொருட்கள் எதுவும் எடுத்து செல்லக்கூடாது எனவும் வனத்  துறையினர் அறிவுறுத்தியதாக கூறப்படு கிறது. இதனால் சுற்றுலா பயணிகள்  வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கினர். எந்தவித அடிப் படை வசதிகளும் இல்லாமல் எதற்காக இரண்டு இடங்களில் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது என சுற்றுலாப் பயணி கள் வனத்துறையினரிடம் கேள்வி எழுப்பினர்.  மேலும் உணவுப் பொருட்களை யாவது எடுத்துச்செல்ல அனுமதி வழங்க  வேண்டும் என தெரிவித்தனர். இதை யடுத்து வனத்துறையினர் சுற்றுலா பய ணிகளை சமரசம் செய்து அனுப்பினர். அப்போது அங்கு சுற்றுலா பயணி ஒருவ ரால் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக  வலைதளங்களில் வைரலாக பரவி வரு கிறது. சம்பந்தப்பட்ட வனத்துறை மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து  அருவியில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க  வேண்டும். மேலும் வாகனங்களை அனு மதிக்காத பட்சத்தில் அருவி வரை சென்று  சுற்றுலா பயணிகளை இறக்கி விடுவ தற்கும் ஏற்றி வருவதற்கும் மட்டுமாவது அனுமதி வழங்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.