districts

மதுரை முக்கிய செய்திகள்

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின்  19-ஆம் ஆண்டு விழா

மதுரை, ஜூலை. 24-  சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் 19-ஆம்  ஆண்டு விழா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் உள்ள  கூட்ட அரங்கில் நிர்வாக நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தலைமை யில் நடைபெற்றது. தென் மாவட்ட மக்களின் நலன் கருதி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த 2004-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்  கிளையின் 19-ஆம் ஆண்டு விழா திங்களன்று உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் உள்ள கூட்ட அரங்கில் கொண்டாடப்பட்டது. விழாவில், உயர்நீதிமன்ற கிளை நிர்வாக நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், நிர்மல் குமார், ஜி.ஆர்.சுவாமிநாதன், முரளிசங்கர், பி.புகழேந்தி, பரதசக்கரவர்த்தி, ஸ்ரீமதி, கே.கே.ராமகிருஷ்ணன், வடமலை உள்ளிட்ட நீதிபதிகள், பதிவாளர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, நீதிபதிகள், கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் வீரா கதிரவன், பாஸ்கரன் அரசு வழக்கறி ஞர்கள், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளுக்கு வழங்கி  வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மொட்டமலையில் அடிப்படைவசதி செய்து தர சிபிஎம் வலியுறுத்தல்

விருதுநகர். ஜூலை 24- திருவில்லிபுத்தூர் அருகே மொட்டமலை நரிக்குற வர் குடியிருப்புகளுக்கு குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது, திருவில்லிபுத்தூர் ஒன்றியத்திற்குட்பட்டது பிள்ளை யார்குளம் ஊராட்சி, இங்குள்ள மொட்டமலைப் பகுதியில்  நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்ற னர், இவர்களுக்கு குடிமனைப் பட்டா அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது, ஆனால், வீடுகள் கட்ட இவர்களி டம் உரிய வசதி இல்லை. இதன் காரணமாக குடிசைகள்  அமைத்து அதில் ஆபத்தான நிலையில் குடியிருந்து வரு கின்றனர். இங்கு குடிநீர் வசதியும் செய்து தரப்பட வில்லை. மொட்டமலை நரிக்குறவர் குடியிருப்புப் பகுதியில் வீடுகள் கட்டித் தரவேண்டும். உடனடியாகக் குடிநீர்  வசதி செய்த தர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.லட்சுமி.  ஒன்றியச் செயலாளர் எஸ்.வி.சசிக்குமார் உள்ளிட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மனு அளித்தனர்.

பால் உற்பத்தியாளர்கள் மீது அவதூறு 

சிவகங்கை, ஜூலை 24- பால் உற்பத்தியாளர்கள் மீது அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிவகங்கை ஆட்சி யரிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவில் கூறப்பட்டி ருப்பதாவது: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பால் உற்பத்தி யாளர் சங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு 9,00லிட்டர் மட்டுமே பால் கொள்முதல் ஆகி வந்தது. பால் உற்பத்தி யாளர் சங்கத் தொழிலாளர்களின் கடின உழைப்பால் பால் உற்பத்தி 8,500 லிட்டராக உள்ளது. இதில் 5,000 லிட்டர் ஆவினுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மீதமுள்ள  3,500 லிட்டர் பால் திருப்புவனம் பகுதிகளில் சில்லரை  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பால் உற்பத்தியா ளர்களுக்கு லிட்டருக்கு ரூ33ம், ஊக்கத்தொகை லிட்ட ருக்கு ரூ1.50ம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் திருப்பு வனம் பால் உற்பத்தியாளர் சங்கத்தை அவதூறு செய்த  நபர் மீது உரிய எடுக்க வேண்டும்.

கணஞ்சாம்பட்டியில் வீடுகளை அகற்றக் கூடாது

 விருதுநகர், ஜூலை 24- விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள கணஞ்சாம்பட்டி கிராம மக்கள் தாங்கள் குடியி ருக்கும் வீட்டை இடிக்கக் கூடாது என ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். வெம்பக்கோட்டை அருகே உள்ளது கணஞ்சாம் பட்டி. இங்குள்ள வடக்குத் தெருவில் 15-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகள் கட்டி பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள சிலர்  இக்குடியிருப்புகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக புகார்  அளித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வெம்பக்  கோட்டை வருவாய் வட்டாட்சியர் அந்தக் குடியிருப்பு களை அகற்றப் போவதாக உரிமையாளர்களிடம் அறி விப்பாணை வழங்கியுள்ளார். இதையடுத்து பலதலைமுறைகளாக வசித்து வரும் வீட்டை அகற்றும் முடிவைக் கைவிட வேண்டும் என மக்கள்  ஆட்சியர் ஜெயசீலனிடம் திங்கள் கிழமை நேரில் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

துக்க வீட்டில் துப்பாக்கிச்சூடு 9 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி

கின்சாகா, (ராய்ட்டர்ஸ்) ஜூலை 24-  துக்கவீட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது  குழந்தைகள் உட்பட 13 பேர் பலியாயினர். காங்கோ நாட்டின் கிழக்கு இடுரி மாகாணத்தில் ஆல்பர்ட் ஏரிக் கரையில் உள்ள நியகோவா கிராமத்தில்  வசிப்பவர் முகுவா. கடற்படை வீரரான இவரது மகன் இறந்து விட்டார். இவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஏராளமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். அப்போது திடீரென ஆவேசம் அடைந்த முகுவா தான் வைத்திருந்த துப்பாக்கியால் மகன் இறுதிச் சடங்கில் பங்கேற்ற கூட்டத்தினர் மீது சரமாரியாக சுட்டார்.   இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உயிருக்குப் பயந்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த துப்பாக்கிச்  சூட்டில் ஒன்பது குழந்தைகள் உட்பட 13 பேர் சம்பவ இடத்தி லேயே குண்டு பாய்ந்து பலியானார்கள். 13 பேர் பலி யானதை நியகோவா கிராமத் தலைவர் ஆஸ்கார் பராகா முகுவாவும், உள்ளூர் அதிகாரியும் உறுதிப்படுத்தினர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவி, மருமகனை சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட காவல் அதிகாரி

புனே, ஜூலை 24-  மஹாராஷ்டிராவில் உதவி காவல் ஆணையர் தன் மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்தவர் பாரத்  கெய்க்வாட்(57). இவரது மனைவி மோனிகா கெய்க்வாட்  (44). பாரத் கெய்க்வாட் சமீபத்தில் தான் அமராவதி நகர்  துணை காவல் ஆணையாளராக இடம் மாறுதல் செய்யப்பட்டார். விடுப்பு எடுத்துக்கொண்டு சனிக்கிழமை  அவர் புனேவில் தமது வீட்டிற்கு வந்துள்ளார். திங்கள்  அதிகாலை 3:30 மணியளவில் வீட்டில் இருந்த போது திடீ ரென தான் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியால் மனைவி மோனிகா, மற்றும் அவரது உறவினர் தீபக் (35)  இருவரையும் சுட்டுக்கொன்றுவிட்டு தானும் துப்பாக்கி யால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “உதவி  காவல் ஆணையர் மனைவியைச் சுட்டுக் கொன்றுள்ளார்.  சத்தம்கேட்டு அவரது மகனும் மருமகனும் ஓடி வந்து கத வைத் திறந்துள்ளனர். அவர்கள் கதவைத் திறந்தவுடன் உதவி காவல் ஆணையர் தனது மருமகனை மார்பில் சுட்டுள்ளார்” என்றார்.. தகவல் அறிந்த சதூர்சிரிங் காவல்துறையினர் வழக்  குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை  முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தேனி, ஜூலை 24- நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து  வரும் கனமழை காரணமாக முல்  லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 737 கன அடியாக அதிகரித்  துள்ளது. இடுக்கி மாவட்டத்திற்கு மஞ்சள்  அலர்ட் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ள நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியது. கடந்த சில நாட்க ளாக நீர் வரத்து குறைந்திருந்த நிலையில் திங்களன்று காலை முல்லைப்பெரியாறு அணைக்கு 737 கன அடி நீர் வந்தது. அணை யின் நீர்மட்டம் 120.10 அடியாக உள்ளது. அணையில் இருந்து தமி ழகப் பகுதிக்கு 400 கன அடி நீர்  திறக்கப்படுகிறது. வைகை அணை யின் நீர்மட்டம் 49.59 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலை யில் மதுரை மாநகர் குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடி. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணை  நீர்மட்டம் 76.88 அடியாக உள்ளது.  வரத்து இல்லாத நிலையில் மூன்று கன அடி நீர் திறக்கப்படுகிறது.  மழையளவு: பெரியாறு-24.2,  தேக்கடி-21.6, கூடலூர்-2.6, உத்தம  பாளையம்-1.4, சண்முகா நதி  அணை 2.2 மி.மீ மழை பதிவாகி யுள்ளது.