சென்னை,அக்.20- தமிழ்நாட்டில் பத்திரப்பதிவுத் துறை ஒரு நாள் மட்டும் ரூ.180 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது தொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் சுபமுகூர்த்த தினங்க ளில் பொதுமக்களின் கோரிக் கையை ஏற்று ஆவணப் பதிவிற்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் அக்.18 அன்று ஒவ்வொரு சார்பதி வாளர் அலுவலகத்திலும் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் வழங்கப்பட்டன. அதன் விளைவாக அக்.19 அன்று மட்டும் ஒரே நாளில் ரூ.180 கோடி வருவாய் ஈட்டி பதிவுத் துறை சாதனை படைத்துள்ளது. சுபமுகூர்த்த தினமாக கருதப்படும் ஐப்பசி முதல் வெள்ளிக்கிழமையான அக்.20 அன்றும் அதிகளவில் பத்திரப் பதிவு கள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் வழங்கு வதற்கு பதிவுத்துறைக்கு உத்தர விடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங் களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவல கங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவல கங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளு டன் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. 12 தட்கல் முன்பதிவு வில்லை களுக்கு கூடுதலாக நான்கு தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொது மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட் டுள்ளது.